பொதுக்காலம் 23ஆம் வாரம் - செவ்வாய்
காலைப் புகழ்
முதல்: | இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும் |
எல்: | ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும். |
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. | |
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா. |
பாடல்
எழுந்தது ஞாயிறு, விடிந்தது காலை,
மிளிர்ந்தன பொருட்கள் பலநிறம் பெற்று,
ஒளிபெற்றது, உலகம் முழுதும்
விளம்பிட விழைகிறது உமதிருப் புகழை.
வல்ல தந்தையின் ஞானம் நீரே,
எல்லாம் தோன்ற வழியான வார்த்தையே
ஒளியும் எழிலும் ஒழுங்கும் பெற்றெம்
உளத்தை உம்பால் உயர்த்திடு வீரே.
ஒளியின் மக்களாம் எமக்கருள் புரிவீர்,
தெளிவுடன் நடப்போம் மிகஆர்வ முடனே;
சொல்லும் செயலும் தந்தையின் அன்பைக்
காட்டிடும் வகையில் வாழ்ந்திடு வோமே.
நாவினால் என்றும் நலமே நவில்வோம்
ஆவியில் உண்மையின் இனிமையை உணர்வோம்;
மூவொரு இறைவா மூவுல கெங்கும்,
ஓயாது ஓங்குக உம்புகழ் என்றும். ஆமென்.
திருப்பாடல்கள்
மு. மொ. 1: ஆண்டவரே, உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; உம் மக்களின் குற்றத்தை மன்னித்தீர்.
நமது மீட்பு அண்மையில் உள்ளது
திபா 85
இவ்வுலகிற்கு வந்த நம் மீட்பர் வழியாக இறைவன் இவ்வுலகை ஆசீர்வதித்துள்ளார்’. (ஒரிஜன்).
ஆண்டவரே, உமது நாட்டின்மீது அருள்கூர்ந்தீர்;
முன்னைய நன்னிலைக்கு யாக்கோபினரைக்
கொணர்ந்தீர்.
உம் மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர்.
உம் சினம் முழுவதையும் அடக்கிக்கொண்டீர்.
கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக்கொண்டீர்.
எம் மீட்பராம் கடவுளே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றியருளும்.
என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினங் கொள்வீர்?
தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?
உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,
எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
ஆண்டவரே, உமது பேரன்பை
எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் புனிதருக்கு நிறைவாழ்வை
அவர் வாக்களிக்கின்றார்;
அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லல் ஆகாது.
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு
மெய்யாகவே அண்மையில் உள்ளது;
அதனால் நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.
பேரன்பும் வாக்குப்பிறழாமையும்
ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி தாழப்பார்க்கும்.
நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம் நிலம் நல்கும்.
நீதி அவர்முன் செல்லும்;
அவர் தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; உம் மக்களின் குற்றத்தை மன்னித்தீர்.
மு. மொ. 2: என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகிறது. விடியலில் உமக்காக விழித்திருக்கிறது.
பகைவர்மேல் வெற்றிப் பாடல்
சிறுபாடல்
எசா 26: 1-4, 7-9, 12
அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன’. (திவெ 21:12)
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு;
நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;
வாயில்களைத் திறந்துவிடுங்கள்;
அவர்மீது நம்பிக்கைக் கொண்ட நேர்மையான
மக்களினம் உள்ளே வரட்டும்.
அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்;
உம்மீது நம்பிக்கை உடையவர்கள்;
அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.
ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்;
ஏனெனில், ஆண்டவர். என் ஆண்டவர்
என்றுமுள கற்பாறை!
நீதிமான்களின் நெறிகள் நோரியவை;
நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.
ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து,
உமக்காகக் காத்திருக்கிறோம்.
உமது திருப்பெயரும் உமது நினைவும்
எங்களுக்கு இன்பமாய் உள்ளன.
என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது;
எனக்குள்ளிருக்கும் ஆவி
ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது;
உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில்
வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.
ஆண்டவரே, நிறைவாழ்வை
நீர் எங்களுக்கு உரியதாக்குவர்!
ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும்
எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகிறது. விடியலில் உமக்காக விழித்திருக்கிறது.
மு. மொ. 3: ஆண்டவரே, உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக.
மக்களினங்கள் ஆண்டவரைப் போற்றுவர்
திபா 67
“ஆகையால் கடவுள் இந்த மீட்பைப் பிற இனத்தார்க்கு அளித்துள்ளார். அவர்கள் செவிசாய்ப்பர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்". (திப 28:28)
இறைவா! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பிற இனத்தார் அனைவரும் நீர் தரும் மீட்பை
உணர்ந்துகொள்வர்.
கடவுளே! மக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன்
பாடிடுவாராக!
ஏனெனில் நீர் மக்களினங்களை
நேர்மையுடன் ஆள்கின்றீர்;
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
கடவுளே! மக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
நானிலம் தன் பலனை ஈந்தது;
கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்
அவருக்கு அஞ்சுவாராக!
கடவுளே! மக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக!
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக.
அருள்வாக்கு
1 யோவா 4: 14-15
தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.
சிறு மறுமொழி
முதல்: | என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன். |
எல்: | என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன். |
முதல்: | அவரே எனக்குப் புகலிடம்; என்னை விடுவிப்பவர் அவரே. |
எல்: | என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன். |
முதல்: | தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. |
எல்: | என் ஆண்டவரே எனக்குத் துணை: என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன். |
செக்கரியாவின் பாடல்
மு. மொ. : தம் தூய இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தபடியே, வல்லமையுடைய மீட்பர் ஒருவரை ஆண்டவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.
லூக் 1: 68-79
மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.
இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.
தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : தம் தூய இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தபடியே, வல்லமையுடைய மீட்பர் ஒருவரை ஆண்டவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.
மன்றாட்டுகள்
தம் இரத்தத்தை நமக்காகச் சிந்தி, கிறிஸ்து உலகின் எல்லா திசைகளிலிருந்தும் தமக்கென ஒரு புதிய மக்கள் இனத்தை ஒன்றுசோத்தார்; நாம் அவரிடம் வேண்டுவோம்.
எல்: கிறிஸ்துவே, உம் மக்களை நினைவுகூர்ந்தருளும்.
கிறிஸ்துவே, நீரே எம் அரசர், நீரே எம் மீட்பர் — நாங்கள் உமதுஆற்றலையும் அன்பையும் அறிந்து கொள்ளத் துணைபுரியும்.
கிறிஸ்துவே, நீரே எம் நம்பிக்கை, எம் துணிவு — இந்நாள் முழுவதும் எங்களுக்கு ஆதரவாயிரும்.
கிறிஸ்துவே நீரே எம் புகலிடம், எம் வலிமை – எமது வலுவின்மையை எதிர்த்து எங்களோடு போராடும்.
கிறிஸ்துவே, நீரே எமது மகிழ்ச்சி, எம் ஆறுதல் — ஏழை எளியவரோடும் தனிமையில் தவிப்பாரோடும் தங்கியருளும்.
ஆண்டவரின் இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.
இறுதி மன்றாட்டு
எல்லாம் வல்ல கடவுளே! அனைத்து நலன்களும் அழகும் கொண்ட இவ்வுலகம் உமக்கே சொந்தம். இந்நாளை உமது திருப்பெயரில் மகிழ்வுடன் தொடங்கவும் எங்கள் இறையன்பு, பிறரன்புப் பணிகளால் நிறைவு செய்யவும் அருள்புரியும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முதல்: | ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எல்: | ஆமென்நண்பகல் இறைவேண்டல்
பாடல்வல்ல அரசரே, உண்மைக் கடவுளே, பற்றி எரியும் பகைமையை அணைப்பீர், தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே, திருப்பாடல்கள்மு. மொ. 1: அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. திபா 119: 97-104 ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தை எனக்கு கற்பிப்போர் யாவரினும் உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு உம் சொற்கள் என் நாவுக்கு தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. மு. மொ. 2: பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபையை நினைந்தருளும். அழிவுற்ற ஆலயத்தைக் குறித்துப் புலம்பல் திபா 74: 1-12 ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். (மத் 10:28). Ⅰ இறைவா! ஏன் நீர் எங்களை பண்டைக்காலத்திலேயே நீர் உமக்குச் நெடுநாளாய்ப் பாழடைந்து கிடக்கும் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப்பின்னல் “அடியோடு அவர்களை அழித்து விடுவோம்” என்று இறைவா! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபையை நினைந்தருளும். மு. மொ. 3: ஆண்டவரே எழுந்து வாரும் உமக்காக நீரே வழக்காடும். திபா 74: 13-23 Ⅱ நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்துவிட்டீர்; ஊற்றுகளையும் ஓடைகளையும் ஆண்டவரே, உம்மை எதிரி இகழ்வதையும் சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : ஆண்டவரே எழுந்து வாரும் உமக்காக நீரே வழக்காடும். அருள்வாக்குஇச 15: 7-8 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே. மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப எவ்வளவு தேவையானாலும் கடன் கொடு.
இறுதி மன்றாட்டுஎல்லாம் வல்ல கடவுளே, அனைத்து மாந்தரின் மீட்பைப் பற்றிய உமது திட்டத்தை நீர் பேதுருவுக்கு வெளிப்படுத்தினீர்; எங்கள் பணிகள் உமக்கு ஏற்றனவாய் இருக்கவும் உமது அருளால் அப்பணி உமது மீட்பின் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றவும் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென்.
மாலைப் புகழ்
பாடல்உலகை அழகுடன் அமைத்தவரே, காயப் பட்ட எமதான்மா எம்மனம் தீமையை விலக்கிடுமே, நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய், திருப்பாடல்கள்மு. மொ. 1: ஆண்டவர் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார். இறைவன் தம் மக்களின் பாதுகாவலர் திபா 125 கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! (கலா 6:16). ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் நல்லோர்க்கும் நேரிய இதயமுள்ளோர்க்கும் ஆண்டவரே தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : ஆண்டவர் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார். மு. மொ. 2: நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள். குழந்தையைப்போல் கடவுள்மேல் நம்பிக்கை திபா 131 ‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’. (மத் 11:29) ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் மாறாக என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் இஸ்ரயேலே இப்போதும் எப்போதும் தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள். மு. மொ. 3: ஆண்டவரே, நாங்கள் எங்கள் கடவுளுக்கு பணிபுரிய, எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் ஏற்படுத்தினீர். மீட்படைந்தோரின் பாடல் சிறுபாடல் எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, “ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் எங்கள் கடவுளுக்கு பணிபுரிய, எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் ஏற்படுத்தினீர். அருள்வாக்குஉரோ 12: 9-12 உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று, ஒருவருக்கொருவர் உளங்களிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வமிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணி புரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள் இறை வேண்டலில் நிலைத்திருங்கள். சிறு மறுமொழி
கன்னிமரியாவின் பாடல்மு. மொ. : என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. லூக் 1: 47-55 என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது. ஆண்டவரை எனது உள்ளம் ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் ஏனெனில் வல்லவராம் கடவுள் அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார் வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்; பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் மூதாதையருக்கு உரைத்தபடியே தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. மன்றாட்டுகள்கடவுள் தம் மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அவரை அன்பு செய்பவர்களின் நம்பிக்கையை எதுவும் முறித்துவிட முடியாது; எனவே நாம் அறிக்கையிடுவோம். எல்: தந்தையே உம்மில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். ஆண்டவராகிய கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் — நீர் மனிதனை எல்லா ஞானத்திலும் நுண்ணறிவிலும் செல்வந்தனாக்கினீர். ஆண்டவராகிய கடவுளே, ஆட்சியாளர் அனைவரின் உள்ளங்களையும் நீர் அறிவீர் — அவர்கள் தாங்கள் ஆளும் மக்களுடைய நலன்களுக்காகவே உழைப்பார்களாக. ஆண்டவரே இந்த உலகைக் கலைகளால் மாட்சிப்படுத்த, மனிதருக்கு ஆற்றலை அளித்திருக்கிறீர் — இவற்றில் தொலைநோக்கும், உண்மையான நம்பிக்கையும் ஒளிரச் செய்யும். எங்களுடைய வரம்புகளுக்கு மேலாக, எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் — வலுவற்றோரை உறுதிப்படுத்தி, வீழ்ச்சியுற்றோரை எழச் செய்யும். தந்தையே, இறுதி நாளில் உமது மகனின் உயிருப்பில் பங்குண்டு என்று நீர் மனிதருக்கு வாக்களித்தீர் — எங்களுக்குமுன் நிலைவாழ்வின் பாதையில் சென்றவர்களை நினைவுகூர்ந்தருளும். ஆண்டவரின் இறைவேண்டல்விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, இறுதி மன்றாட்டுஆண்டவரே, எங்கள் மாலைப்புகழ் உமது இரக்கத்தின் அரியணையின்முன் எழுவதாக. உமது அருளாசியை எம்மீது பொழிந்தருளும். இதன் வழியாக இன்றும் என்றும் உமது அருள் எமக்குத் துணையாயிருந்து எமக்கு மீட்பளிப்பதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென்.
இரவு இறைவேண்டல்
பாடல்பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா, கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக, இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக இறைவா, எல்லாம் வல்ல தந்தாய் அல்லது கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில் உடலின் கண்கள் உறங்கி மூடினும் காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப் எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே. அல்லது போயது பொழுது புகுந்தது இரவு; கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம் முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே திருப்பாடல்கள்மு. மொ. 1: என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். ஏனெனில், நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன். வறட்சி நிலையில் இறைவேண்டல் திபா 143: 1-11 “திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்” (கலா 2:16அ). ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; எதிரி என்னைத் துரத்தினான்; உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்; உமது பேரன்பை வைகறையில் ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். ஏனெனில், நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அருள்வாக்கு1 பேது 5: 8-9அ அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். சிறு மறுமொழி
சிமியோன் பாடல்மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம். லூக் 2: 29-32 கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார். ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு இம்மீட்பே பிற இனத்தாருக்கு தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம். இறுதி மன்றாட்டுஆண்டவரே, உமது இரக்கத்தால் இவ்விரவின் இருளை விரட்டியருளும். உமது பணியாளர்கள் அமைதியில் உறங்கவும் உமது திருப்பெயரில் மகிழ்வுடன் விழித்தெழுந்து புதிய நாளின் ஒளியைக் காணவும் கருணை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென். ஆசியுரைஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென். தூய மரியாவுக்குப் பாடல்வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே தாயகம் இழந்த ஏவையின் மக்கள் கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக் அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே கருணையின் உருவே தாய்மையின் கனிவே அல்லது மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர் வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர் அல்லது வானகம் ஆளும் அரசியே வாழ்க மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க. அல்லது கடவுளின் அன்னையே கன்னி மரியே இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து ♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️ Join with us 👇 Website: https://catholicvoicecv.blogspot.com Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076 Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283 WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz |
No comments:
Post a Comment