Showing posts with label பொதுக்காலம் 25 வாரம். Show all posts
Showing posts with label பொதுக்காலம் 25 வாரம். Show all posts

Friday, September 23, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (24-09-2022)

 † இன்றைய புனிதர் †



(செப்டம்பர் 24)


✠ புனிதர் ஜெரார்ட் ✠

(St. Gerard of Csanad)


துறவி/ ஆயர்/ மறைசாட்சி:

(Monk, Bishop and Martyr)


பிறப்பு: ஏப்ரல் 23, 977

வெனிஸ், வெனிஸ் குடியரசு

(Venice, Republic of Venice)


இறப்பு: செப்டம்பர் 24, 1046

பூடா, ஹங்கேரி அரசு

(Buda, Kingdom of Hungary)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


புனிதர்பட்டம்: கி.பி. 1083

திருத்தந்தை 7ம் கிரகோரி

(Pope Gregory VII)


பாதுகாவல்: 

ஹங்கேரி, புடாபெஸ்ட் நாடு

(Hungary, Budapest)


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 24


புனிதர் ஜெரார்ட், ஹங்கேரி அரசிலுள்ள (Kingdom of Hungary) “கஸநாட்” (Csanád) எனும் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஆவார்.

இவருடைய தந்தையின் பெயரும் ஜெரார்ட் (Gerard) ஆகும். இவரது தாயார் கேதரின் (Catherine) ஆவார். மூன்று வருட நீண்ட காத்திருப்பின் பின்னர், இவர் புனிதர் ஜார்ஜ் (George) அவர்களின் நினைவு நாளன்று (23 ஏப்ரல்) பிறந்ததால் இவரது திருமுழுக்குப் பெயர் ஜார்ஜ் (George) என்றானது. ஒரு திருப்பயணத்தின்போது மரணமடைந்த இவரது தந்தையின் நினைவாக இவரது பெயர் ஜெரார்ட் என்று மாற்றப்பட்டது.

‘ஜெரார்ட்’ அல்லது ‘ஜெரார்ட் சாக்ரேடோ’, கி.பி. 1030ம் ஆண்டு முதல் தமது மரணம் வரை ஹங்கேரி அரசிலுள்ள ‘கசானாட்’ (Csanad) என்ற மறைமாவட்டத்தின் முதலாம் ஆயர் ஆவார். இவர், வெனிஷிய உயர்குடியில் பிறந்தவர். ஐந்து வயதில் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட இவர், ‘பெனெடிக்ட் சான் ஜியார்ஜியோ மடாலயம்’ (Benedictine San Giorgio Monastery) அனுப்பப்பட்டார். அங்கே அவர் துறவியர்களுக்குரிய கல்வியை சிறப்புறக் கற்றார். அத்துடன் இலக்கணம், இசை, தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவையையும் கற்றுத் தேர்ந்தார்.

கி.பி. 1020ம் ஆண்டு, புனித பூமி செல்வதற்காக திருப்பயணம் மேற்கொண்ட ஜெரார்ட் வெனிஸ் நகர் விட்டு கிளம்பினார். ஆனால், வழியில் ‘இஸ்ட்ரியா’ (Istria) எனும் இடத்தில் நிலைகொண்ட புயலால் அவர் பயணத்தை தொடர இயலாமல் போனது. அவர் ஹங்கேரி அரசுக்கு செல்ல முடிவெடுத்தார். அங்கே, பெக்ஸ் மறைவாட்ட ஆயர் (Bishop of Pécs) ‘மௌரஸ்’ (Maurus) மற்றும் ஹங்கேரியின் அரசர் முதலாம் ஸ்டீபன் (Stephen I of Hungary) ஆகியோர் அவரை திருப்பயணம் தொடர வேண்டாமென சமாதானப்படுத்தினர். அத்துடன், அவரது மறை போதனை ஹங்கேரியர்களை மனம் மாற்ற தீவிரப்படுத்தும் என நம்பினார்.

கி.பி. சுமார் 1030ம் ஆண்டு, அரசர் முதலாம் ஸ்டீபன், ஜெரார்டை புதிதாக உருவாக்கப்பட்ட ‘கசானாட்’ (Diocese of Csanád) மறை மாவட்டத்திற்கு ஆயராக நியமித்தார். ஹங்கேரிய மொழி பேசத் தெரிந்த ‘பெனடிக்டின்’ துறவிகள் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு மறைபோதனை செய்ய ஜெரார்டுக்கு உதவினர்.

வெனிஸ் நகர் ஆயர் ஹங்கேரி நாட்டு அரசருக்கு பலவிதங்களில் உதவினார். அதனால் புனித ஜெரார்ட் வெனிஸ் நகர ஆயருக்கு மறைமாவட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் ஹங்கேரி நாட்டு அரசர் புனித ஸ்டீபனின் மகன் வெனிஸ் நகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கும், படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். ஹங்கேரி நாட்டில் கிறிஸ்தவம் வளர்வதற்கு அந்நாட்டு அரசர் புனித ஸ்டீபனிற்கும் பெரும் உதவியாக இருந்தார். 

ஹங்கேரியின் அரசர் “முதலாம் ஸ்டீபன்” (Stephen I of Hungary), கி.பி. 1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, மரணமடைந்தார். அவரது மரணத்தின் பின்னர், அவரது மருமகன் “பீட்டர் ஆர்சியேலொ” (Peter Orseolo) முடி சூடிக்கொண்டார். ஆனால், மூன்று வருடங்களின் பின்னர், கி.பி. 1041ல் பீட்டர் முடி துறந்தார். அவருக்கு பின்னே ஆட்சிக்கு வந்த ‘சாமுவேல் அபா’ (Samuel Aba), பல பிரபுக்களை சுட்டுக்கொன்றான். ஒருமுறை, கசானாட் நகருக்கு விஜயம் செய்த ‘சாமுவேல் அபா,’ தேவாலயத்தில் “உயிர்த்தெழுந்த ஞாயிறன்று” (Resurrection) திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த ஆயர் ஜெரார்டிடம், தமது தலையில் கிரீடம் அணிவிக்க உத்தரவிட்டார். ஆனால் அதற்கு ஜெரார்ட் பணியவில்லை. ஆனால், அரசனுடன் உடன் சென்றிருந்த பிற ஆயர்கள் அரசனின் ஆணைப்படி அவனுக்கு முடிசூட்டினர். தமது பிரசங்கத்திற்காக வெளியே சென்ற ஜெரார்ட், அரசன் பிறரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவன் என்றும், அவன் தலையில் உள்ளது கிரீடமல்ல, மாறாக அது “ஏமாற்றும் பட்டயம்” என்று பிரசங்கித்தார்.

கி.பி. 1044ம் ஆண்டு, புனித ரோமப்பேரரசன் மூன்றாம் ஹென்றி ஹங்கேரியின்மீது படையெடுத்து வந்து, போரிட்டு ‘சாமுவேல் அபா’வை தோற்கடித்ததாகவும், ‘பீட்டர் ஆர்சியேலொ’வை மீண்டும் பதவியில் அமர்த்தியதாகவும் சரித்திரம் கூறுகிறது. ஜெரார்ட் இறக்கும் வரை வெனிஸ் மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்காக பெரிதும் உழைத்து மறைப்பணியை ஆற்றியுள்ளார்.

மறைசாட்சியாக ஜெரார்ட் மரித்ததற்கான வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றிலொன்று, அவர், கல்லெறிந்து, ஈட்டியால் குத்தப்பட்டு, அவரது உடல் ‘தன்யூப்’ நதியின் ஒரு குன்றில் இருந்து எறியப்பட்டதாக கூறுகிறது. மற்றொன்று, அவர் ஒரு இரு சக்கர வண்டியில் கட்டி இருத்தப்பட்டு ‘புதா’ (Buda) என்ற மலை உச்சியிலிருந்து தள்ளி உருட்டப்பட்டதாகவும், பின்னரும் அவர் உயிருடன் இருந்ததால் சாகும்வரை அடித்தே கொல்லப்பட்டதாகவும் கூறுகிறது. 

இவரது மரணத்தின் பின்னர், அம்மலையானது “கெல்லர்ட் ஹில்” (Gellert Hill) என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.

------------------------------------------------------------------

† Saint of the Day †

(September 24)


✠ St. Gerard of Csanád ✠


Monk, Bishop and Martyr:


Born: 977/1000 AD

Venice, Republic of Venice


Died: September 24, 1046

Buda, Kingdom of Hungary


Venerated in: Roman Catholic Church


Canonized: 1083 AD

Pope Gregory VII


Feast: September 24


Patronage: Hungary, Budapest


St. Gerard of Csanád was the first Bishop of Csanád in the Kingdom of Hungary from around 1030 to his death. Most information about his life was preserved in his legends which contain most conventional elements of medieval biographies of saints. He was born in a Venetian noble family, associated with the Sagredos or Morosinis in sources written centuries later. After a serious illness, he was sent to the Benedictine San Giorgio Monastery at the age of five. He received excellent monastic education and also learnt grammar, music, philosophy and law.

He left Venice for a pilgrimage to the Holy Land around 1020, but a storm compelled him to break his journey near Istria. He decided to visit the Kingdom of Hungary. Maurus, Bishop of Pécs, and Stephen I of Hungary convinced him not to continue his pilgrimage, emphasizing that Gerard's preachings could accelerate the conversion of the Hungarians. Gerard was made the tutor of the king's son and heir, Emeric. Before long, Gerard went to the Bakony Hills to live as a hermit near Bakonybél. Stephen, I made him bishop of the newly established Diocese of Csanád (encompassing present-day Banat in Serbia, Romania and Hungary) around 1030. Benedictine monks who could speak Hungarian helped him to preach among the local inhabitants.

Gerard's Long Life dedicates two chapters to his family and childhood. Conventional elements of medieval hagiographies abound in both chapters, suggesting that the author borrowed many motives from other legends, especially from the Life of Saint Adalbert of Prague. Gerard was born in Venice in a noble family. The noble origin of saintly hermits was often emphasized in their legends.

The identification of Gerard's family is uncertain. An expanded version of Petrus de Natalibus's Catalogue of Saints, which was published in 1516, identified Gerard as a member of the Sagredo family. Although the family was granted Venetian nobility only in the 14th century, some scholars (including Fabio Banfi) accept the Sagredos' claim to their kinship with Saint Gerard. Historian László Szegfű says that Gerard was actually a Morosini.

Gerard's father, who was also named Gerard, and mother, Catherine, had awaited his birth for three years. They baptised their son George because he was born on the feast of Saint George (23 April). The year of his birth is unknown, but he was born between around 977 and 1000. He was renamed in memory of his father who died during a pilgrimage or journey (anachronistically mentioned in Gerard's Long Life as a crusade).

At the age of five, Gerard was taken seriously ill. His recovery was attributed to the prayers of the Benedictine monks of the San Giorgio Monastery in Venice. His family soon sent him to the monastery, offering him spiritual life. Gerard took the "religious cloth" and was educated in the monastery. He could read and write and knew the basic elements of arithmetic. His Long Life emphasizes that Gerard strictly observed the rules of monastic life and wore coarse clothes to "mortify his body". He also studied the "words of the prophets and the speeches of the Orthodox apostles". The use of certain expressions (including dux verbi, or "leader of the Word") suggests that Gerard read Pseudo-Dionysius the Areopagite in Greek.

The Holy Roman Emperor, Henry III, invaded Hungary and defeated Aba in the Battle of Ménfő in 1044. Peter Orseolo was restored, but his rule was unpopular because he favoured his German and Italian retainers.

Gerard's martyrdom took place on 24 September 1046, during the Vata pagan uprising. His co-martyrs were Bystrik and Baldus. There are various accounts of his death. According to one, he was stoned, pierced with a lance, and his body thrown from the Blocksburg cliff into the Danube. An alternate account claims that he was placed on a two-wheel cart, hauled to the hilltop and rolled down a hill of Buda, now named Gellert Hill, then still being alive at the bottom, was beaten to death. Other unverified tales report him as being put into a spiked barrel and rolled down the hill during a mass revolt of pagans.

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-09-2022)

 பொதுக்காலம் 25ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8


இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே.

“வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4

ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;

6

அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13

ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

17

எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


2 திமொ 1: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45


அக்காலத்தில்

இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


திருப்பாடல் 90: 3-4, 5-6, 12-13, 14, 17 (1)

“நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்”

வெற்றிக்கு என்ன செய்வது?


தன் முன்னேற்றப் பேச்சாளர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், “நான் எந்தவொரு செயலைச் செய்தாலும், அதில் எனக்குத் தோல்வியே மிஞ்சுகின்றது. நான் செய்யும் செயலில் எனக்கு வெற்றி கிடைக்க நான் என்ன செய்வது?” என்று எழுதப்பட்டிருந்தது.

தன் முன்னேற்றப் பேச்சாளர் தனக்கு வந்த அந்தக் கடிதத்திலிருந்த அஞ்சல் தலையை கிழித்தெடுத்து, அதை ஓர் உறைக்குள் போட்டு, கூடவே இப்படியொரு குறிப்பினையும் எழுதி அனுப்பி வைத்தார்: “இந்த அஞ்சல்தலை அதன் இலக்கினை அடையும்வரை உறையை அப்படியே பற்றிக் கொண்டிருக்கின்றது. நீயும் உன் இலக்கினை அடையும் வரை அஞ்சலைத் தலையைப் போன்று உன் இலக்கினை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், உனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.”

வெற்றியை அடைவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வில் வரும் தன் முன்னேற்றப் பேச்சாளர் தரும் விளக்கம் மிகவும் அற்புதமானது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் மோசே, “நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

மனிதர்களாகிய நாம் எவ்வளவோ செயல்களைச் செய்கின்றோம். அவை எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி கிடைத்துவிடுகின்றதா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நம்மால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியாததற்குக் காரணம், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 90 இல் மோசே சொல்வதுபோல், நாம் அனைவரும் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பானவர்கள். இப்படிச் சாதாரண மனிதர்களாக, வறியவர்களாக இருப்பதாலேயே நம்மால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடிவதில்லை.

அதே நேரத்தில் நாம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழ்ந்தோமெனில், நம்மால் எதிலும் வெற்றி பெற முடியும். அதனால்தான் மோசே, இத்திருப்பாடலின் இறுதியில், “நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்” என்று மன்றாடுகின்றார். மோசே, ஆண்டவரைப் பற்றிக்கொண்டால் மட்டுமே எதிரிகளிடமிருந்து வெற்றியைப் பெற முடியும் என்று உறுதியாக நம்பியிருந்தார். நாமும் ஆண்டவரை உறுதியாகப் பற்றிக் கொண்டால், நமக்கு எதிலும் வெற்றியே!


சிந்தனைக்கு:

 ஆண்டவரால் எல்லாம் கூடும். அதனால் நாம் அவற்றைப் பற்றிக் கொண்டு வாழ்வோம்.

 நமது வலுவின்மையை உணர்ந்து, ஆண்டவரின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

 ஆண்டவரே நம் ஆற்றல் என்பதால் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவோம்.


இறைவாக்கு:

‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13) என்பார் புனித பவுல். எனவே, நாம் நமது வலிமையையும் ஆற்றலுமான ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



“உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே”

இளமையில் கல்:


ஒருநாள் பங்குப் பணியாளரைப் பார்க்க ஒருவர் தன் மகனுடன் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், “என் மகன் இவனுக்கு இப்போது ஆறு வயது ஆகின்றது. இந்த வயதில் இவனுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? இவன் வளர்ந்து பெரியவனாகி, அவனே மறைக்கல்வி கற்றுக் கொள்ளட்டுமே!” என்றார்.

பங்குப் பணியாளர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “இல்லத்திற்கு பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு என்னோடு உங்களால் வர முடியுமா?” என்றார். “வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு, முன்னால் சென்ற பங்குப் பணியாளரைப் பின் தொடர்ந்தார் அவர்.

இல்லத்திற்குப் பின்னால் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அதில் வெறும் களைகள் மட்டுமே மண்டிக் கிடந்தன. அதைப் பார்த்துவிட்டு வந்திருந்த மனிதர், “வெறும் களைகள் மட்டுமே இங்கு உள்ளன. இது எப்படித் தோட்டமாகும்?” என்றார். “நீங்கள் சொல்வது மிகச் சரி” என்று அவரிடம் பேசத் தொடங்கிய பங்குப் பணியாளர், “அதுவாகவே வளரட்டும் என்று தோட்டத்தை அப்படியே விட்டுவிட்டேன். அதனால்தான் வெறும் களைகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். சிறு வயதில் எதற்கு மறைக்கல்வி என்று கேட்டீர்களே! சிறுவயதிலேயே மறைக்கல்வியைக் கற்றுத் தராவிட்டால், உங்களுடைய மகனுடைய உள்ளத்தில் களைகள் மட்டுமே எஞ்சியிருக்கும்” என்றார். வந்தவர் எதுவும் பேசாமல் திரும்பிப் போய்விட்டார்.

ஆம், சிறுவயதிலேயே ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்வதும், அவரை உள்ளத்தில் நினைப்பதும் மிகவும் இன்றியமையாதவை. அதை இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

இன்று ஒருசிலர் நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இதில் எதற்குக் கடவுளை நினைக்கவேண்டும், அவரை வழிபட வேண்டும்? என்றெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். கடவுளை எதற்கு நாம் நினைக்கவேண்டும், அவரை எதற்கு நாம் வழிபட வேண்டும் என்றால், அவரே நம்மைப் படைத்தவர். அதைவிடவும் நாம் அவருக்கு உரியவர்கள்.

சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே” என்கிறது. தொடர்ந்து, “உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை” என்று மும்முறை சொல்கிறது. எனில், நம்மைப் படைத்தவரை மறவாமல், அவரை உள்ளத்தில் நினைப்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம், கடவுளை நம் உள்ளத்தில் நினைத்துப் பார்ப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணத்தைச் சொல்கிறது. அது என்னவெனில், இயேசு கிறிஸ்து நமக்காகப் பாடுகள் பட்டார், நமக்கு மீட்பினைக் கொண்டு வந்தார். என்பதாகும். இத்தகு காரணங்களால் நாம் கடவுளை மறந்துவிடாமல், அவரை நமது உள்ளத்தில் நினைத்துப் பார்த்து, அவரது வழியில் நடக்கவேண்டும்.


சிந்தனைக்கு:

 கடவுளை மறப்பதும் இறப்பதும் ஒன்றே

 இளமையில் கல்லாமல், முதுமையில் கற்றுக்கொள்வது என்பது காற்றைக் கையில் பிடிப்பது போன்று அவ்வளவு கடினமானது.

 நமது உயிருக்கு அடைக்கலமான ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.


இறைவாக்கு:

‘உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக் கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்’ (திபா 119: 93) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்கு வாழ்வளிக்கும் ஆண்டவரின் கட்டளைகளை நமது மனத்தில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Thursday, September 22, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (23-09-2022)

 † இன்றைய புனிதர் †



(செப்டம்பர் 23)
✠ புனிதர் பியோ ✠
(St. Pio of Pietrelcina)
துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு:
(Priest, Religious, Mystic, Stigmatist, and Confessor)
பிறப்பு: மே 25, 1887
பியட்ரல்சினா, பெனேவென்ட்டோ, இத்தாலி
(Pietrelcina, Benevento, Italy)
இறப்பு: செப்டம்பர் 23, 1968 (வயது 81)
சேன் ஜியோவன்னி ரொட்டொன்டோ, ஃபொக்கியா, இத்தாலி
(San Giovanni Rotondo, Foggia, Italy)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: மே 2, 1999
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
புனிதர் பட்டம்: ஜூன் 16, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
முக்கிய திருத்தலங்கள்:
சான் ஜியோவானி ரொட்டொன்டோ, இத்தாலி
(San Giovanni Rotondo, Italy)
நினைவுத் திருவிழா: செப்டம்பர் 23
பாதுகாவல்:
மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் (Civil defense volunteers), வளர் இளம் பருவத்தினர் (Adolescents), மன அழுத்த நிவாரணம் (Stress relief), இத்தாலி மற்றும் மால்ட்டா (Italy and Malta), பியட்ரல்சினா (Pietrelcina)
பியட்ரல்சினா நகரின் புனிதர் பியோ, கப்புச்சின் துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் “ஃபிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன்” (Francesco Forgione), கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். குருவானது முதல் “பாட்ரே பியோ” என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் தேதி அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
தொடக்க காலம்:
தென் இத்தாலியின் “கம்பானியா” (Campania) எனும் பிராந்தியத்தின் “பியட்ரல்சினா” (Pietrelcina), என்னும் விவசாய நகரில் “க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன்” (Grazio Mario Forgione) (1860–1946) – “மரிய க்யுசெப்பா டி நுன்ஸியோ” (Maria Giuseppa Di Nunzio) (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887ம் ஆண்டு, மே மாதம், 25ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த “தூய அன்னா” (Santa Anna Chapel) சிற்றாலயத்தில் திருமுழுக்கு பெற்ற இவர், தமது சிறுவயதில் பீடப் சிறுவனாக திருப்பலிகளில் குருவுக்கு உதவி செய்து வந்தார். இவருக்கு “மிச்சேல்” (Michele) எனும் மூத்த சகோதரனும், “ஃபெலிசிட்டா” (Felicita), “பெல்லக்ரீனா” (Pellegrina) மற்றும் “க்ரேஸியா” (Grazia) ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், கார்மேல் அன்னையின் (Our Lady of Mount Carmel) மேலுள்ள பக்தி காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ம் வயதில் “மொர்கோன்” (Morcone) நகரிலுள்ள கப்புச்சின் சபையில் புகுநிலை துறவியாக இணைந்த இவர், ஜனவரி 22ம் தேதி தனது துறவற ஆடைகளைப் பெற்றுக்கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார். இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.
குருத்துவ வாழ்வு:
ஏழு ஆண்டுகள் குருத்துவப் கல்வியின் பின்னர், 1910ம் ஆண்டு, பேராயர் “பவோலோ சிநோசி” (Archbishop Paolo Schinosi) பியோவுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றிய காரணத்தால் குடும்பத்துடன் வசிப்பதற்காக இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.
1917ம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.
இவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்ää பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.
திருக்காய வரம்:
1918ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறும் பேறு பெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.
அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.
இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின. லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை. ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.
இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன. 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.
புனிதர் பட்டம்:
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்" என்று குறிப்பிடுவார். 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும், இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ம் தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.
1968 செப்டம்பர் 23ம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ம் தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------
† Saint of the Day †
(September 23)
✠ St. Pio of Pietrelcina ✠
Priest, Religious, Mystic, Stigmatist, and Confessor, and "Saint of the Cross":
Born: Francesco Forgione
May 25, 1887
Pietrelcina, Benevento, Italy
Died: September 23, 1968 (Aged 81)
San Giovanni Rotondo, Foggia, Italy
Venerated in: Catholic Church
Beatified: May 2, 1999
Pope Saint John Paul II
Canonized: June 16, 2002
Pope Saint John Paul II
Feast: September 23
Patronage:
Pietrelcina, Italy; Civil Defense Volunteers; Adolescents; Stress Relief; January Blues; Italy; Malta
Padre Pio, also known as Saint Pio of Pietrelcina was a friar, priest, stigmatist, and mystic, now venerated as a saint of the Catholic church. Born Francesco Forgione, he was given the name of Pius (Italian: Pio) when he joined the Order of Friars Minor Capuchin.
Padre Pio became famous for exhibiting stigmata for most of his life, thereby generating much interest and controversy. He was both beatified (1999) and canonized (2002) by Pope John Paul II.
The Sanctuary of Saint Pio of Pietrelcina is located in San Giovanni Rotondo, Province of Foggia, Italy.
A Short Biography:
Padre Pio (Francesco Forgione) was born to Giuseppa and Grazio Forgione, in the small farming town of Pietrelcina, Italy on May 25, 1887. Although the Forgione's were poor in material goods, they were certainly rich in their faith life and in the love of God.
Even as a young boy, Francesco had already shown signs of extraordinary gifts of grace. At the age of five, he dedicated his life to God. From his early childhood, he showed a remarkable recollection of spirit and a love for religious life. His mother described him as a quiet child who, from his earliest years, loved to go to church and to pray. As a young boy, he was able to see and communicate with, not only his guardian angel but also with Jesus and the Virgin Mary. In his simplicity, Francesco assumed everyone had the same experiences. Once a woman who noticed his spiritual demeanour asked him, “When did you consecrate your life to God? Was it at your first Holy Communion?” and he answered, “Always, daughter, always.”
When Francesco was fifteen years old, he was admitted to the novitiate of the Capuchin Order of the Friars Minor in Morcone, Italy. He was admired by his fellow students as well as by his Superiors for his exemplary behaviour and his deep piety. One of the novices stated, “There was something which distinguished him from the other students. Whenever I saw him, he was always humble, recollected, and silent. What struck me most about Brother Pio was his love of prayer.”
On August 10, 1910, at the age of twenty-three, Padre Pio was ordained to the priesthood. The celebration of the Holy Mass was for Padre Pio, the centre of his spirituality. Due to the long pauses of contemplative silence into which he entered at various parts of the Holy Sacrifice, his Mass could sometimes last several hours. Everything about him spoke of how intensely he was living the Passion of Christ. The parish priest in Pietrelcina called Padre Pio’s Mass, “an incomprehensible mystery.” When asked to shorten his Mass, Padre Pio replied, “God knows that I want to say Mass just like any other priest, but I cannot do it.”
His parishioners were deeply impressed by his piety and one by one they began to come to him, seeking his counsel. For many, even a few moments in his presence, proved to be a life-changing experience. As the years passed, pilgrims began to come to him by the thousands, from every corner of the world, drawn by the spiritual riches which flowed so freely from his extraordinary ministry. To his spiritual children, he would say, “It seems to me as if Jesus has no other concern but the sanctification of your soul.”
Comments:
“Our time needs to rediscover the value of the Cross in order to open the heart to hope. Throughout his life, Padre Pio always sought greater conformity with the Crucified, since he was very conscious of having been called to collaborate in a special way in the work of redemption. His holiness cannot be understood without this constant reference to the Cross.” Thus St. Pope John Paul II described Padre Pio's holiness at his canonization which was witnessed by over one million people at the Vatican on 16 June 2002.
We are more and more getting used to Miracle Centres and Victory Churches. Often a significant number of Christians are easily taken over by "miracles" and "victory", often meaning economic and material prosperity. Interest in ex-ordinary and supernatural things dominate the faith of many Christians, a faith that often does not lead to spirituality. It stops at an emotional level. But Christianity is much more than spectacular things. Miracle stories of the gospels are only signs and they do not become the foundation of our faith. Our faith is founded on the cross; Christianity is all about the cross.
Padre Pio was disposed to a deep sense of spirituality right from his childhood. He was born to a simple peasant farmer at Pietrelcina on May 25, 1887, and was baptized with the name Francesco after St. Francis of Assisi. Having been born in a prayerful family, at the age of five he decided to dedicate his life to God. The family devotedly prayed Holy Rosary daily, attended daily Mass and abstained from meat three days a week in dedication to Our Lady of Mount Carmel. Though the parents were illiterates they recited to young Francesco and his siblings' several passages of the scriptures from memory.
In this atmosphere, the pious boy could see and speak with Jesus, Our Lardy, and his Guardian Angel on a daily basis in mystical experience. He also experienced heavenly visions and ecstasies in his youth and it lasted throughout his life. Seeing his son's interest in joining religious life his father arranged for private tuition to make him qualified to join the seminary. Francesco entered Capuchin novitiate at the age of 15 and professed as a friar with the name Pio and later ordained a priest in 1910.
In the turbulent period of the First World War, he was drafted into military service briefly but was found unfit due to poor health. His experience of the supernatural intensified during his priestly years. On September 20, 1918, while listening to Confession, he received the stigmata for the first time. He had bodily marks, pain, and bleeding in the locations corresponding to the crucifixion of Our Lord. He would experience the stigmata for fifty years until he neared his death. The blood flowing from his wounds gave off a perfume smell that was similar to flowers. He tried to live with it in secret but eventually described the experience to his superior and spiritual director.
He described seeing in a vision a mysterious person with hands, feet, and sides dripping blood. He was terrified with the vision that caused him physical and spiritual pain, but after having been strengthened by the Lord himself he came to possess the same wounds he saw in the vision. The bleeding intensified on Thursdays and Saturdays. He spoke to the Superior thus:
"Dear Father, I am dying of pain because of the wounds and the resulting embarrassment I feel deep in my soul. I am afraid I shall bleed to death if the Lord does not hear my heartfelt supplication to relieve me of this condition. Will Jesus, who is so good, grant me this grace? Will he at least free me from the embarrassment caused by these outward signs? I will raise my voice and will not stop imploring him until in his mercy he takes away, not the wound or the pain, which is impossible since I wish to be inebriated with pain, but these outward signs which cause me such embarrassment and unbearable humiliation…. the pain was so intense that I began to feel as if I were dying on the cross."
Padre Pio was always fascinated by the mystery of the Cross. But now was made to realize it intensely in his own body. The words of St. Paul came true in his life: "I count everything as loss for the surpassing knowledge of knowing Christ and him crucified." His life and spirituality began to be centred around the cross.
We cannot deny the extraordinary things that surround the life of Padre Pio. He touched the lives of many people both Catholics and non-Catholics through his grace of extraordinary charisms —bilocation, prophetic visions, healing, reading of consciences — and the stigmata. The tangible, captivating and spectacular. But we should not forget the underlying spirituality and the holiness of the saint. He bore his spiritual gifts with a calm manner and endured the great interior and mystical suffering that came with it. He always said, he wants to be remembered as " a poor friar who prayed" and nothing more than that. May he pray for us to become apostles of the cross. The saint died on 23 September 1968 and on this day his feast is celebrated.
~ Rev. Father: Lazar Arasu SDB, Salesians of Don Bosco Missionary in Uganda

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-09-2022)

 

பொதுக்காலம் 25ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.

வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 144: 1a,2a-c. 3-4 (பல்லவி: 1a)

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1a
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
2a-c
என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! - பல்லவி

3
ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?
4
மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில்

இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


“என் கற்பாறையும் கோட்டையும் அவரே!”

அடைக்கலப் பாறை:


விவசாயி ஒருவர் தனது விளைநிலத்திற்கு நடுவில் குடிசை அமைத்து, அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். வழக்கத்திற்கு மாறாக, அந்த ஆண்டு, அவருடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அதனால் அவர் அறுவடைக்காக ஆவலோடு காத்திருந்தார்.

அறுவடைக்கு முந்தைய நாள் இரவில், புயலும் மழையும் வந்து அவருடைய விளைநிலத்தைப் பாழாக்கிவிட்டுப் போயின. மறுநாள் காலையில், அவர் தன்னுடைய மகனுடன் விளைநிலத்தைப் பார்த்தார். மகனுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அவன் தன் தந்தை பாழாய்க் கிடக்கும் விளைநிலத்தைப் பார்த்து என்ன சொல்லப் போகிறாரோ? என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவர், “அடைக்கலப் பாறையான ஆண்டவரே! இந்தப் புயல் மழையிலும் எனக்கும் என் மனைவி, மகனுக்கும் எதுவும் ஆகாமல் காத்துக்கொண்டீரே! அதற்கு உமக்கு நன்றி! தொடர்ந்து எம்மை அடைக்கலப் பாறையாக இருந்து காத்துக்கொள்ளும்” என்றார். இவ்வார்த்தைகள் மகனுடைய உள்ளத்தில் இருந்த வருத்தத்தைப் போக்கி, நம்பிக்கையை ஊட்டின.

ஆம், புயல் மழையால் தன் விளைநிலமே பாழாய்ப்போயிருந்தாலும், தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் ஆண்டவர் அடைக்கலப் பாறையாக இருந்து காத்ததற்காக அந்த விவசாயி ஆண்டவருக்கு நன்றி சொன்னார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடலில் தாவீது, ஆண்டவர் அடைக்கலப் பாறையாக இருந்து தன்னைக் காத்ததற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

எதிரிகளிடமிருந்து ஆண்டவர் தன்னை காத்ததற்கு நன்றியாகத் தாவீது பாடுகின்ற நன்றிப்பாடல்தான் இன்று நான் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 144. இத்திருப்பாடலில் வருகின்ற முதல் எட்டு இறைவார்த்தையும், திருப்பாடல் 18, 1 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தையும் நிறையவே ஒத்துப் போகின்றன

இஸ்ரயேலின் அரசராக இருந்த தாவீதுக்கு முதலில் சவுலிடமிருந்தும், பின்னர் எதிரிகளிடமிருந்தும், அதன்பின்னர் அவருடைய சொந்த மகன் அப்சலோமிருந்தும் ஆபத்துகள் வந்த வண்ணமாய் இருந்தன. அத்தகைய வேளையில், தாவீது ஆண்டவரே தன்னுடைய அடைக்கலப் பாறை (திபா 19:14, 31:3, 42:9, 62:3, 71:3, 89:26, 92:15, 95:1) என்று ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்தார். ஆண்டவரும் அவரை எதிரிகளிடமிருந்தும் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் காத்தார். அதனால்தான் தாவீது, “என் கற்பாறையும் கோட்டையும் அவரே!” என்கிறார்.

தாவீதை ஆண்டவர் எதிரிகளிடமிருந்து காத்தது போல, நம்மையும் அவர் பலவிதமான ஆபத்துகளிலிருந்து காத்திருப்பார். அதற்கு நன்றியாக நாம் அவரைப் போற்றுவோம்.

சிந்தனைக்கு:

 நம்முடைய உயிருக்கு அடைக்கலமாக இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்வோம்.

 .கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசிகளுக்கு அவருக்கு நன்றி செலுத்துவதே முறை

 ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போருக்கு அவர் வலுவூட்டுகின்றார்.

இறைவாக்கு:

‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?’ (உரோ 8:31) என்பார் புனித பவுல். எனவே, கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


கொலை செய்யப்படவும் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்

மலிவு விலையில் சிலுவை:


அது ஒரு பெரிய திருத்தலம். அந்தத் திருத்தலத்திற்கு முன்பாக மெழுகுதிரிகள், புனிதர்கள் மற்றும் இயேசுவின் திருவுரும் தாங்கிய படங்கள், சிலுவைகள், மந்திரிக்கப்பட்ட கயிறுகள், முதலியவற்றை வைத்துச் சிலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். அது புனித வாரம் என்பதால் மக்களும் அவற்றை ஆர்வமாய் வாங்கிச் சென்றார்கள்.

இவற்றுக்கு நடுவில் ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரம் அமோகமாக நடைபெற வேண்டும் என்பதற்கு, “இங்கு மலிவு விலையில் சிலுவை கிடைக்கும்” என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். இதைத் தற்செயலாக அப்பக்கமாய் வந்த கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பெரியவர் ஒருவர் கேட்டு, அதிர்ந்து போய்க் குறிப்பிட்ட அந்த வியாபாரியிடம், “சிலுவை விலை மலிவானது அல்ல; அது விலை மதிப்பில்லாதது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆம், ஆண்டவர் இயேசு சிலுவையில் கொலையுண்டதால் அது மலிவானது அல்ல; விலை மதிப்பானது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, தான் சிலுவையில் அறையுண்டு கொல்லப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவேண்டும் என்கிறார். அவர் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததால் அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்ட சிலுவை வெற்றியின் சின்னமாக, விலைமதிக்கப் பெறாததாக ஆனது. இயேசு ஏன் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இறைவாக்கினர் எசாயா நூலில், கடவுளின் எண்ணங்கள் மனித எண்ணங்கள் அல்ல, மனிதரின் வழிமுறைகள் கடவுளின் வழிமுறைகள் அல்ல (எசா 55:8) என்று நாம் வாசிப்போம். இதையே சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர் “கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது” என்பார். இது முற்றிலும் உண்மை இதைத் தெளிவுபடுத்துகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அதன்பிறகு நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள் என்ற கேள்வியைச் சீடரிடம் கேட்க, பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கிறார். உடனே இயேசு, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தனது பாடுகளையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கின்றார்.

இயேசு ஏன் பாடுகள் பட வேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்திருக்கும். அவர்களின் எண்ணமெல்லாம் மெசியாவாம் இயேசு உரோமையர்களிடமிருந்து தங்களுக்கு விடுதலை அளித்து, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்வார் என்பதாகவே இருந்தது. ஆனால், இயேசு யூதர்கள் எதிர்பார்த்தது போல, அரசியல் மெசியா அல்ல, மாறாக, அவர் துன்புறும் ஊழியன். கோதுமை மணி போல் மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அல்லது அவர் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டால்தான் தந்தையின் திருவுளமான உலகை மீட்க முடியும். எனவேதான் சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளிக்கின்றார் இயேசு.

கடவுளின் திருவுளம் சில சமயங்களில் நமக்குப் புரியாத புதிராக இருக்கலாம். ஆனால், நாம் இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மைக் கையளித்தால், அவரது ஆசியைப் பெறலாம். இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் உணர்வு செயல்படுவோம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் திருவுளம் நம் வழியாகச் சிறப்புறச் செய்வோம்.

 நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்கு நாம் எதையும் இழக்கத் தேவையில்லை. ஆண்டவர் விருப்பத்தின்படி நடக்கின்றபோதுதான் நாம் நிறைய இழக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அது இழப்பே அல்ல.

 சிலுவைகள் இன்றி சிம்மாசனம் இல்லை.

இறைவாக்கு:

‘இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை’ (உரோ 8: 18) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவைப் போன்று, நமது வாழ்வில் துன்பம் வாந்தாலும், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...