Showing posts with label தூய மரியா. Show all posts
Showing posts with label தூய மரியா. Show all posts

Wednesday, September 14, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (15-09-2022)

 ✠ அதிதூய வியாகுல அன்னை ✠

(Our Lady of Sorrows)



திருவிழா நாள் : செப்டம்பர் 15


பாதுகாவல் :

ஸ்லோவாக்கியா (Slovakia), ஹங்கேரி (Hungary), போலந்து (Poland), மால்ட்டா (Malta), மரியாளின் ஏழு வியாகுலங்கள் (Seven Sorrows of Mary), மிசிசிப்பி (Mississippi), ரோண்டா (Ronda), செபு (Cebu), டனவன் பஸ்டோஸ் (Tanawan Bustos), புலாகன் (Bulacan)


வியாகுல அன்னை என்பது கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியாள் தமது வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இறைவனின் அன்னைக்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது. வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியாள் அதிகம் சித்தரிக்கப்படுகிறார்.


மரியாளின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளது. பொதுவாக, கத்தோலிக்க கலையில் வியாகுல அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும் சித்தரிப்பது வழக்கம். சிமியோனின் (Simeon) இறைவாக்கின் அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பக்தி முயற்சிகளில் அடங்கும்.


“தூய மரியாளின் துயரங்கள்” என்னும் பெயரில் மரியாளுக்கு கத்தோலிக்க திருச்சபையில் பிரதி செப்டம்பர் மாதம் 15ம் நாள் விழா எடுக்கப்படுகின்றது.


மரியாளின் ஏழு துயரங்கள்:

இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.


1. சிமியோனின் இறைவாக்கு:

மரியாளும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரும் குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது, அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்” (லூக்கா 2:34-35) என்று மரியாளிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாளின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

(லூக்கா 2:25-35)


2. குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல்:

ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது, குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட சூசையப்பர், மரியாளையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாளுக்கு இது ஒரு வியாகுலம்தான்.

(மத்தேயு 2:13-14)


3. சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல்:

தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், “மரியாள் அடைந்த வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான். ஏனென்றால், மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாளோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாளோடு இல்லை. தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாரோ என மரியாள் நினைத்திருக்கக் கூடும். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்”. தூய லிகோரி சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாளுக்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.

(லூக்கா 2:43- 47)


4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்:

கள்வர்களுக்கும், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியாள் மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.

(லூக்கா 23:27)


5. சிலுவையின் அடியில் துணை நின்றது:

ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாளுக்கு வேதனையிலும் வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கைநெகிழ்ந்தது, இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று மரியாள் மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்.

(யோவான் 19:41,42)


6. இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல்:

எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோன் சொன்ன ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்’ என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியாள் பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாளுக்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.

(யோவான் 19: 40)


7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல்:

இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியாள் அடக்கம் செய்கிறார். உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்? மரியாள் தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாளைப் பொறுத்தளவில் பாடுகள்தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத் துக்கங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.

(யோவான் 19: 41-42)


இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும், கிறிஸ்து கற்பித்த “பரலோக மந்திரம்” (Our Father) ஒருமுறையும், மற்றும் “அருள்நிறைந்த” (Hail Mary) “மங்கள மந்திரம்” ஏழு முறையும் செபிப்பது கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (15-09-2022)

 

புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை)


நினைவு

இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16a)

பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.

1
ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
2ab
உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். - பல்லவி

2c
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

4
அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். - பல்லவி

14
ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.
15
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். - பல்லவி

19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! - பல்லவி

தொடர்பாடல்

இப்பாடலை முழுமையாகவோ அல்லது சுருக்கமாகவோ (எண் 11. தூய நல்தாயே... முதல்) தேவைக்கேற்ப பாடலாம் அல்லது சொல்லலாம்.

  1. திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில்,
    கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ!
    நின்றார் வியாகுலத் தாய்மரி.
  2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத்
    துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ!
    ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.
  3. தேவ சுதனின் அன்பால் அன்னை,
    பேரரும் ஆசி பெற்றவர், அன்று
    எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.
  4. அன்புத் தாயவர் மாண்புறு மகனின்
    துன்பம் அனைத்தும் நோக்கிய போது
    கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!
  5. இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும்
    கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில்
    எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!
  6. தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும்
    கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில்
    உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!
  7. தம்முடைய மக்களின் பாவம் நீங்க
    தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
    தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.
  8. தேனினுமினிய தேவனின் மைந்தன்
    அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
    தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்
  9. அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா,
    அடியேன் உம்முடன் அழுது வருந்த,
    உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.
  10. இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து
    என்றும் அவருக் குகந்தவராக,
    என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.
  11. தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்:
    துயருறும் சிலுவை நாதரின் காயம்
    ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.
  12. அடியேனுக்காய்க் காயமும் துன்பமும்
    ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின்
    துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.
  13. சிலுவை நாதருடன் துயருறவும்,
    பக்தியால் உம்முடன் புலம்பவும்,
    என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.
  14. சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும்
    கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து
    பங்குற விரும்புகின்றேனே.
  15. கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே,
    கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி
    உம்மோடழுதிட அருள் செய், அம்மா.
  16. கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும்
    பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும்
    காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.
  17. நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும்
    அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும்
    என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.
  18. என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில்
    வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே,
    என்னைக் காத்திடுவீரே.
  19. கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே
    வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத்
    தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.
  20. என்னுடல் மரித்து அழியும் போதில்
    என்றன் ஆன்மா பரகதி மகிமை
    எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

 யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 33-35

அக்காலத்தில்

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பொதுக்காலம் 24ஆம் வாரம் - வியாழன்

நற்செய்தி வாசகம் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி

16
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி

28
என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். - பல்லவி


 ♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, September 11, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (12-09-2022)

 † இன்றைய திருவிழா †



(செப்டம்பர் 12)
✠ அதிதூய மரியாளின் புனிதப் பெயர் ✠
(Most Holy Name of the Blessed Virgin Mary)
திருவிழா நாள்: செப்டம்பர் 12
துருக்கி நாட்டுப் படையானது கிறிஸ்தவ நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வந்து போர்தொடுக்கலாம் என்றதொரு அபாயச் சூழல் நிலவியது. இதை அறிந்த போலந்து நாட்டு மன்னன் ஜான் சொபீஸ்கி (John Sobikeski) என்பவர் தன்னுடைய படைகளைத் போருக்குத் தயார்படுத்தினார். பின்னர் தன்னுடைய படையை மரியாவின் புனித பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்து, போருக்குச் சென்றார். கி.பி. 1683ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் நாள், வியன்னாவில் இரு நாட்டுப் படைவீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஜான் சொபீஸ்கியின் தலைமையிலான கிறிஸ்தவப் படையானது, துருக்கி நாட்டுப் படையை வெற்றிகொண்டது. அன்றிலிருந்தே மரியாளின் புனித பெயருக்கு வணக்கம் செலுத்தும் முறையானது வழக்கில் வந்தது.
வரலாற்றுப் பின்னணி:
மரியாளின் புனித பெயருக்கு வணக்கம் செலுத்தும் முறை, கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்பட்ட நிகழ்விற்குப் பின்னர் இவ்வழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகத் தொடங்கியது. ஜான் சொபீஸ்கி தலைமையிலான கிறிஸ்தவப் படை துருக்கி நாட்டுப் படையை வெற்றிகொண்ட பிறகு, அப்போது திருத்தந்தையாக இருந்த பதினோறாம் இன்னொசென்ட் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ம் நாள், மரியாளின் புனித பெயருக்கு விழா எடுத்துக் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே கொண்டாடப்பட்டு வருகின்றது.
மரியாளின் புனித பெயருக்கு இருபதுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருப்பதாக அறிஞர்கள் பெருமக்கள் சொல்வார்கள். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொண்டு சிந்தித்துப் பார்ப்போம். விவிலிய அறிஞரான எரோனிமுஸ் என்பவர் மரியாள் என்றால் கடலின் ஒரு துளி (Drop of the Sea) என்று சொல்வார். அது எப்படியென்றால் கடல் என்பது கடவுளோடு உருவகப்படுத்தப்படுகின்றது. கடல் கடவுளாக உருவகப்படுத்தப்படும் பட்சத்தில் அதில் ஒரு துளி மரியாள் என்று சுட்டிக்காட்டுவார். மேலும் அவர் மரியாள் என்பதற்கு இறைவி என்றும் சுட்டிக்காட்டுவார். இன்னும் ஒருசிலர் மரியாள் என்பதற்கு அழகு நிறைந்தவள், அன்பு வடிவானவள், உயர்த்தப்பட்டவள் என்றும் பொருள் கூறுவர்.
விவிலியத்தில் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயருக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை பல இடங்களில் வாசிக்கின்றோம். “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” (யோவா 16:23) என்று இயேசு கிறிஸ்து தன் பெயரால் நடக்கும் வல்ல செயல்களைக் குறித்துப் பேசுகின்றார். “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்” (திப 3:6) என்று தலைமைத் திருத்தூதரான தூய பேதுரு கால் ஊனமுற்றவரிடம் சொல்ல, அவர் எழுந்து நடப்பதைப் படிக்கின்றோம். தூய பவுல் இயேசுவின் திருப்பெயர் எத்துணை மகிமை வாய்ந்தது என்பதைக் குறித்துப் பேசுகின்றார். “எனவே கடவுளும் அவரை (இயேசுவை) மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்” என்று கூறுகின்றார் (பிலி 2: 9-10) இவ்வாறு இயேசுவின் திருப்பெயரால் ஆகும் வல்ல செயல்களை, அதனுடைய மகிமையை நாம் அறிந்துகொள்கிறோம்.
இயேசுவின் திருப்பெயரைப் போன்றே, மரியாளின் புனிதப் பெயருக்கும் வல்லமை இருக்கின்றது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூருகின்றது. தூய பிரிஜித்துக்கு மரியாள் கொடுத்த காட்சியில், அலகையின் கூட்டம் மரியாளின் பெயரை யாராவது உச்சரிக்கக் கேட்டவுடன் மிரண்டு ஓடுவதையும், வானதூதர்கள் விரைந்து வந்து உதவுவதையும் படித்தறிக்கின்றோம். தூய அம்ரோசியார், “மரியாளின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இருக்கின்றது” என்று சுட்டிக்காட்டுவார். இன்னும் இது போன்று தூயவர்களின் வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்போது மரியாளின் பெயருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
‘இனிய உன் நாமம் ஒதிடல் தினமே’ என்று மரியாளுக்குப் பாடல் பாடும் நாம், அவருடைய புனித பெயரை நம்பிக்கையோடு சொல்லுகின்றபோது அதனால் வாழ்வு பெறுவோம் என்பது உறுதியான செய்தி.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்:
மரியாளின் திருப்பெயருக்கு விழா எடுக்கும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
மரியாளின் பெயரைச் சொல்வோருக்கு, மரியாள் மகிழ்ச்சியைத் தருவார்:
தூய அல்போன்ஸ் லிகோரி தான் எழுதிய ‘மரியாளின் மாண்பு’ என்ற புத்தகத்தில் சொல்லக்கூடிய நிகழ்வு:
வயதான குருவானவர் ஒருவர் கிளி ஒன்று வளர்த்தார். அந்தக் கிளிக்கு அவர் ஒவ்வொரு நாளும் ‘மரியே வாழ்க’ என்ற திருநாமத்தை சொல்லி வளர்த்தார். அந்த கிளியும் அதனை எளிதாகக் கற்றுக்கொண்டது. ஒருநாள் அவர் அந்த கிளியை கூண்டிலிருந்து திறந்துவிட்டு, தன்னுடைய பங்களாவிற்கு முன்பாக அது நடந்து செல்லும் அழகை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடிரென்று மேலே பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்று, அதன்மேல் பாய்ந்து, கிளியைத் தூக்கிச் செல்லப் பார்த்தது. அப்போது அந்தக் கிளி தனக்குத் தெரிந்த ‘மரியே வாழ்க’ என்பதைச் சொன்னது. உடனே, கிளியைத் தூக்க வந்த பருந்து தரையில் விழுந்து செத்து மடிந்தது.
மரியாளின் திரு நாமத்தினால் நமக்கு வரும் தீவினைகளும் விட்டு ஓடிவிடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நாமும் மரியாளின் பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கும் போது தீவினைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடும் என்பது உறுதி. ஆகவே, மரியாளின் புனித பெயருக்கு விழா எடுக்கும் இந்த நாளில் நாமும் அவருடைய பெயரை நம்பிக்கையோடு சொல்வோம். அதனால் எல்லாம் நலன்களையும் பெறுவோம்.
நன்றி : திரு புஷ்பராஜா
-------------------------------------------------------------------
† Feast of the Day †
(September 12)
✠ The Most Holy Name of the Blessed Virgin Mary ✠
Feast Day: September 12
On this day dedicated to the Holy Name of Mary let us repeat that wonderful prayer of Saint Bernard, responding to Pope Benedict XVI's invitation to “invite everyone to become a trusting child before Mary, even as the Son of God did. Saint Bernard says, and we say with him: 'Look to the star of the sea, call upon Mary… in danger, in distress, in doubt, think of Mary, call upon Mary. May her name never be far from your lips, or far from your heart… If you follow her, you will not stray; if you pray to her, you will not despair; if you turn your thoughts to her, you will not err. If she holds you, you will not fall; if she protects you, you need not fear; if she is your guide, you will not tire; if she is gracious to you, you will surely reach your destination”'
~ Pope Benedict XVI, address at Heiligenkreuz Abbey, September 9, 2007
The Feast of the Most Holy Name of the Blessed Virgin Mary is an optional memorial celebrated in the liturgical calendar of the Catholic Church on 12 September. It has been a universal Roman Rite feast since 1684 when Pope Innocent XI included it in the General Roman Calendar to commemorate the victory at the Battle of Vienna in 1683. It was removed from the Church calendar in the liturgical reform following Vatican II but restored by Pope Saint John Paul II in 2002, along with the Feast of the Holy Name of Jesus.
There are two simple points of this feast to draw home today: the honouring of the name of Mary, and also understanding the importance of a name through our baptism.
Revering the Holy Names of Jesus and Mary:
It is of such importance that we honour Jesus and His Holy Name. Our main inspiration comes from St. Paul to the Philippians 2:9-11
Because of this, God greatly exalted him and bestowed on him the name that is above every name, that at the name of Jesus every knee should bend, of those in heaven and on earth and under the earth, and every tongue confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.
Reverence is extended for the Blessed Virgin Mary and her name. The Catholic Encyclopedia explains that "we venerate the name of Mary because it belongs to her who is the Mother of God, the holiest of creatures, the Queen of heaven and earth, the Mother of Mercy... The feast commemorates all the privileges given to Mary by God and all the graces we have received through her intercession and mediation."
The Roman Missal includes directives to bow our heads in reverence at the names of Jesus, Mary, and the Saint of the Day when they are mentioned in the prayers of the liturgy.
In the 18th century the Divine Praises or Laudes Divinae were added to the prayers at Benediction, but can be prayed many times in reparation for the many waves of abuse to the name of Jesus and Mary. Included in the litany, we proclaim, “Blessed be the name of Mary, Virgin, and Mother."
As we are continuing Our Lady's Thirty Days, we can think of simple ways to honour Our Lady today. One idea is designing and colouring a monogram of Mary, such as beautiful "M". Even the image of the back of the Miraculous Medal could be an inspiration for contemplation of Our Lady's Name.
Our Name and Baptism:
With my apologies to Shakespeare, this feast day and the Holy Name of Jesus helps us focus on the importance and significance of our own personal names. We are reminded of our reception of the sacrament of Baptism when we were given our name in Christ, which is more significant than our civil name.
How does the Church guide us in choosing names? Canon 761 of the 1917 Code of Canon Law stated: "Pastors should take care that a Christian name is given to those whom they baptize; but if they are not able to bring this about, they will add to the name given by the parents the name of some Saint and record both names in the book of baptisms." The 1983 Code of Canon Law which is currently in effect still stresses the importance of a Christian name, Can. 855: "Parents, sponsors and parish priests are to take care that a name is not given which is foreign to Christian sentiment."
So much thought and time goes into naming our children. We talk about passing on family names and perhaps naming after important people in our lives. Sometimes the meaning of the name is taken into consideration. We are attracted to some names and repulsed by others. We even try out the initials to make sure they flow well.
Even since Biblical times, the naming of a child was of utmost importance. With the founding of Christianity and the spilling of the blood of the martyrs, the tradition of naming children after saints was two-fold: asking for intercession from the saint for the child, and also a saint for the child to emulate. Earlier this week on the feast of the Birth of Mary, I emphasized the connection with the family of Christ. Our Christian names after saints indicate that association with our brothers and sisters in Christ.
So at this feast of the Holy Name of Mary, we praise her greatness and seek her aid at the invocation of her holy name. We also consider our own Christian name which was conferred at our baptism, when we became part of this family of Christ. Through the intercession of Mary and our patron saints, may we deepen our love of Christ our brother and love for our family in Christ, the Mystical Body of Christ.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, September 7, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை)



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

உலகின் புனித முதல்வியே வாழி,
உயர்வான் புகழும் அரசியே வாழி,
அலை கடல்தனின் ஒளிர்மீன் வாழி,
அனைவரின் அன்னையாம் கன்னியே வாழி.

இனிமை மகளாய் வந்துதித்தாயே,
இறையருள் நிறை கன்னியாய் ஒளிர்வாயே,
தனிமலர் இறைமகன் கிறிஸ்து இயேசுவைத்
தரணியிற் கொணரத் தகுந்தவள் ஆனாய்.

ஆண்டுகள் தோறும் கொண்டாடு கின்றோம்
அரியஉன் பிறப்பின் திருவி ழாவை;
மாண்புடன் உலகில் நீ ஒளிர்வாயே,
மாந்தருள் சிறந்த இனத்துதித்தாயே.

உலகில் வாழும் நாங்களெல்லோரும்,
உயர்வான் உன்னுடன் உறைபவ ரானோம்;
அலகிட முடியா வகையினில் எம்மை
ஆண்டவ னோடுற வாகிடச் செய்வாய்.

மூவொரு இறைவா, உமக்கென்றென்றும்
முடிவிலா மாட்சியும் புகழும் ஆகுக;
மேவிடும் உம் உயர் அருளால் அல்லவோ
மேதகு திருச்சபைக்கு அவளன்னை ஆயினாள்.
ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆபிரகாமின் வித்திலிருந்தும் யூதாவின் குலத்திலிருந்தும் தாவீதின் அடிமரத்திலிருந்தும் எழுந்தவருமாகிய மாட்சிமிக்க கன்னிமரியா பிறந்த நாள் இதுவே.

இறைவேட்கை

திபா 63: 1-8

இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக.

கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில் உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

என் வாழ்க்கை முழுவதும்
இவ்வாறே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல்
என் உயிர் நிறைவடையும்;
மகிழ்ச்சிமிகு இதழ்களால் என் வாய் உம்மைப் போற்றும்.

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில் உம்மைப்பற்றியே
ஆழ்ந்து சிந்திப்பேன்.
ஏனெனில் எனக்கு நீர் துணையாய் இருக்கின்றீர்;
உம் இறக்கைகளின் நிழலில்
நான் மகிழ்ந்து பாடுகின்றேன்.
உம்மை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆபிரகாமின் வித்திலிருந்தும் யூதாவின் குலத்திலிருந்தும் தாவீதின் அடிமரத்திலிருந்தும் எழுந்தவருமாகிய மாட்சிமிக்க கன்னிமரியா பிறந்த நாள் இதுவே.


மு. மொ. 2: தூய கன்னிமரியா பிறந்தபொழுது உலகனைத்தும் ஒளியால் நிறைந்தது; இத்தகைய பேறுபெற்றக் கன்னியைப் பெற்றெடுத்த அடிமரம் புனிதமும் ஆசியும் பெற்றதுவே.

படைப்பனைத்தின் பாடல்

சிறுபாடல்
தானி (இ) 1: 34-65

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே,
ஆண்டவரை வாழ்த்து;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆற்றல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மழையே, பனியே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
காற்றுவகைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நடுக்கும் குளிரே, கடும் வெயிலே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

பனித்திவலைகளே, பனிமழையே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக;
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நிலத்தில் தளிர்ப்பவையே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
வானத்துப் பறவைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

காட்டு விலங்குகளே, கால்நடைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

நீதிமான்களே, நீங்கள் அனைவரும்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்
அனனியா, அசரியா, மிசாவேல்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

தந்தை மகன் தூய ஆவியாரைப் புகழுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப்பெறுவீராக;
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

மு. மொ. : தூய கன்னிமரியா பிறந்தபொழுது உலகனைத்தும் ஒளியால் நிறைந்தது; இத்தகைய பேறுபெற்றக் கன்னியைப் பெற்றெடுத்த அடிமரம் புனிதமும் ஆசியும் பெற்றதுவே.


மு. மொ. 3: தூய கன்னிமரியாவின் பிறப்பை அகமகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்; அவரே நமக்காக ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார்.

புனிதரின் மகிழ்ச்சிப்பா

திபா 149

இறைவனின் புதிய மக்களாம் திருச்சபையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)

புதியதொரு பாடலை ஆண்டவருக்குப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
தம்மைப் படைத்தவரைக் குறித்து
இஸ்ரயேலர் மகிழ்வராக!
தம் அரசரை முன்னிட்டுச்
சீயோனின் மக்கள் களிகூர்வார்களாக!

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு மீட்பளித்து
மேன்மைப்படுத்துவார்.

அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாயில் இறைபுகழ் இருக்கட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும்
கூர்மையான வாள் இருக்கட்டும்.

அவர்கள் வேற்றினத்தாரிடம்
பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;

வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;

இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : தூய கன்னிமரியாவின் பிறப்பை அகமகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்; அவரே நமக்காக ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார்.


அருள்வாக்கு

எசா 61: 10

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன்போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள்போலும் விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நோர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.


சிறு மறுமொழி

முதல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.
எல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.
முதல்:தம் சொந்த உறைவிடத்திலேயே ஆண்டவர் அவரைக் குடியிருக்கச் செய்தார்.
எல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : கடவுளின் கன்னித்தாயே, உம் பிறப்பு உலகனைத்திற்கும் மகிழ்ச்சியை அறிவித்தது. ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் கதிரவன், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து உதயமானார்; இவரே சாபத்தை ஒழித்து ஆசியைக் கொணர்ந்தார்; சாவை அழித்து எமக்கு நிலைவாழ்வை அளித்தார்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளின் கன்னித்தாயே, உம் பிறப்பு உலகனைத்திற்கும் மகிழ்ச்சியை அறிவித்தது. ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் கதிரவன், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து உதயமானார்; இவரே சாபத்தை ஒழித்து ஆசியைக் கொணர்ந்தார்; சாவை அழித்து எமக்கு நிலைவாழ்வை அளித்தார்.


மன்றாட்டுகள்

கன்னிமரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நமக்கு விடுதலை அளிப்பவரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரே, உமது அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.

நீதியின் கதிரவனே! அமல உற்பவியான கன்னிமரியாவில் உமது நாளை உதயமாகச் செய்தீர் — உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும்.

என்றும் வாழும் வார்த்தையே! மரியாவின் உயிருள்ள சதையில் நீர் ஓர் உறைவிடத்தை இப்புவியில் கண்டுகொண்டீர் — பாவக் கறையிலிருந்து விடுதலை பெற்ற எங்கள் உள்ளங்களில் என்றும் தங்கியருளும்.

எங்களுக்கு விடுதலை அளிப்பவரான கிறிஸ்துவே! நீர் இறக்கும்போது அருகில் உம் தாயும் இருக்கவேண்டும் எனத் திருவுளம் கொண்டீர் — அவரது பரிந்துரையால் நாங்களும் உமது பாடுகளில் பங்கு பெறுவதில் மகிழ்வோமாக.

அன்புநிறை விடுதலை அளிப்பவரே! சிலுவையில் நீர் தொங்கிய போது உம் தாய் மரியாவை யோவானுக்குத் தாயாகக் கொடுத்தீர் — எங்களது நல் வாழ்க்கையால் நாங்கள் அவரது பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துவோமாக.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,
ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவது நலம். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.

மீட்படைந்தோரின் பாடல்

திபா 118: 1-9

‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தன்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ (திப 4:11)

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என
ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
ஆண்டவருக்கு அஞ்சுவோர் சாற்றுவார்களாக!

நெருக்கடி வேளையில்
நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;
அவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
ஆண்டவர் என் பக்கம் இருக்க
நான் ஏன் அஞ்ச வேண்டும்?

மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய இயலும்?
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர்
என் பக்கம் உள்ளார்;
என் பகைவர்க்கு நேர்வதை
நான் கண்ணாரக் காண்பேன்.

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவது நலம். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.


மு. மொ. 2: ஆண்டவர் என் ஆற்றல். என் பாடல், அல்லேலூயா.

திபா 118: 10-18

வேற்றினத்தார் அனைவரும்
என்னைச் சூழ்ந்துகொண்டனர்;
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.

எப்பக்கமும் அவர்கள் என்னை
வளைத்துக்கொண்டார்கள்;
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.
தேனீக்களைப்போல்
அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்;
நெருப்பிலிட்ட முட்களைப்போல்
அவர்கள் சாம்பலானார்கள்;
ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி
வீழ்த்த முயன்றார்கள்;
ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்;
என் மீட்பும் அவரே.
நேர்மையாளரின் கூடாரங்களில்
மீட்பின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது;

ஆண்டவரது வலக்கை
வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
கண்டித்தார். ஆண்டவர் என்னைக் கண்டித்தார்;
ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் என் ஆற்றல். என் பாடல், அல்லேலூயா.


மு. மொ. 3: ஆண்டவரே, நீர் என் மன்றாட்டைக் கேட்டதால், நான் உம்மைப் புகழ்வேன், அல்லேலூயா.

திபா 118: 19-29

நேர்மையாளர் செல்லும் வாயில்களை
எனக்குத் திறந்துவிடுங்கள்;
உள்ளே நுழைந்து ஆண்டவருக்கு நான்
நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரது வாயில் இதுவே!
இது வழியாய் நேர்மையாளரே நுழைவர்.
என் மன்றாட்டை நீர் கேட்டதால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
எனக்கு நீர் மீட்பரானதால்
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.

ஆண்டவரே மீட்டருளும்!
ஆண்டவரே வெற்றிதாரும்!
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!
ஆண்டவரது இல்லத்தினின்று
உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
ஆண்டவரே இறைவன்;
அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;

கிளைகளைக் கையிலேந்தி
விழாவினைத் தொடங்குங்கள்;
பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
என் இறைவன் நீரே!
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;
என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நீர் என் மன்றாட்டைக் கேட்டதால், நான் உம்மைப் புகழ்வேன், அல்லேலூயா.


அருள்வாக்கு

கலா 6: 8

தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர். ஆவியாருக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவியார் அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்.


முதல்:ஆண்டவரே, உமது வார்த்தை என்றும் நிலைத்துள்ளது.
எல்:உமது உண்மை என்றென்றும் நீடித்திருக்கிறது.

இறுதி மன்றாட்டு

ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்



மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

இறைவனின் அருள் நிறைஅன்னையே நீ
நரர் எம் இனத்தின் பெருமையும் நீ,
இருளார் அடிமைத் தளை நீங்க
பரனுடன் ஒத்துழைத் தாய், போற்றி!

மரியே அரச கன்னிகையே,
மன்னன் தாவீதின் குல மகளே,
அருமந்த மரபினும் மிக உயர்ந்தாய்,
அருள் மகன்தன் மதிப்பால் சிறந்தாய்.

பாவ விலங்குத் தளையறுப்பாய்
பரிவாய் உனையாம் வேண்டுகிறோம்;
பாவில் உன்புகழ் பாடும் எம்மைப்
பரமப் பேற்றில் சேர்த்திடுவாய்.

வானுயர் இறைவனுக்கே மாட்சி:
ஏனெனில் மரியே உன்னை அவர்
மானிட ருள் மிகச் சிறந்தவளாய்
வானருள் அனைத்தும் அளித்தாரே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஈசாயின் அடிமரத்திலிருந்து கன்னிமரியா பிறந்தார். உன்னதரின் ஆவியார் அவருள் வந்து தங்கினார்.

இறைவேட்கை

திபா 63: 1-8

இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக.

கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில் உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

என் வாழ்க்கை முழுவதும்
இவ்வாறே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல்
என் உயிர் நிறைவடையும்;
மகிழ்ச்சிமிகு இதழ்களால் என் வாய் உம்மைப் போற்றும்.

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில் உம்மைப்பற்றியே
ஆழ்ந்து சிந்திப்பேன்.
ஏனெனில் எனக்கு நீர் துணையாய் இருக்கின்றீர்;
உம் இறக்கைகளின் நிழலில்
நான் மகிழ்ந்து பாடுகின்றேன்.
உம்மை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஈசாயின் அடிமரத்திலிருந்து கன்னிமரியா பிறந்தார். உன்னதரின் ஆவியார் அவருள் வந்து தங்கினார்.


மு. மொ. 2: இன்று தூய கன்னிமரியா பிறந்த நாள். கடவுள் அவரது எழிலினைக் கண்ணாக்கினார். தாழ்நிலையில் இருந்த அவரைக் கடவுள் சந்தித்தார்.

படைப்பனைத்தின் பாடல்

சிறுபாடல்
தானி (இ) 1: 34-65

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே,
ஆண்டவரை வாழ்த்து;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆற்றல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மழையே, பனியே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
காற்றுவகைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நடுக்கும் குளிரே, கடும் வெயிலே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

பனித்திவலைகளே, பனிமழையே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக;
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நிலத்தில் தளிர்ப்பவையே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
வானத்துப் பறவைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

காட்டு விலங்குகளே, கால்நடைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

நீதிமான்களே, நீங்கள் அனைவரும்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்
அனனியா, அசரியா, மிசாவேல்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

தந்தை மகன் தூய ஆவியாரைப் புகழுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப்பெறுவீராக;
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

மு. மொ. : இன்று தூய கன்னிமரியா பிறந்த நாள். கடவுள் அவரது எழிலினைக் கண்ணாக்கினார். தாழ்நிலையில் இருந்த அவரைக் கடவுள் சந்தித்தார்.


மு. மொ. 3: கடவுளின் அன்னையாம் கன்னிமரியா தூய்மை ஆனவர்; நமது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்; அவர் ஆண்டவரிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரது பிறப்பு நாளை நாம் கொண்டாடுகிறோம்.

புனிதரின் மகிழ்ச்சிப்பா

திபா 149

இறைவனின் புதிய மக்களாம் திருச்சபையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)

புதியதொரு பாடலை ஆண்டவருக்குப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
தம்மைப் படைத்தவரைக் குறித்து
இஸ்ரயேலர் மகிழ்வராக!
தம் அரசரை முன்னிட்டுச்
சீயோனின் மக்கள் களிகூர்வார்களாக!

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு மீட்பளித்து
மேன்மைப்படுத்துவார்.

அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாயில் இறைபுகழ் இருக்கட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும்
கூர்மையான வாள் இருக்கட்டும்.

அவர்கள் வேற்றினத்தாரிடம்
பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;

வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;

இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளின் அன்னையாம் கன்னிமரியா தூய்மை ஆனவர்; நமது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்; அவர் ஆண்டவரிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரது பிறப்பு நாளை நாம் கொண்டாடுகிறோம்.


அருள்வாக்கு

கலா 4: 4-5

ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.


சிறு மறுமொழி

முதல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
எல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
முதல்:பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.
எல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : மாட்சிமிகு கன்னிமரியாவின் தகுதிநிறை பிறப்பை நினைவுகூர்வோமாக. அவரது தாழ்நிலையை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் கருவுற்று உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பார் என்பதை அவருக்கு அறிவிக்க அவரது வானதூதரை அனுப்பினார்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : மாட்சிமிகு கன்னிமரியாவின் தகுதிநிறை பிறப்பை நினைவுகூர்வோமாக. அவரது தாழ்நிலையை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் கருவுற்று உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பார் என்பதை அவருக்கு அறிவிக்க அவரது வானதூதரை அனுப்பினார்.


மன்றாட்டுகள்

கன்னிமரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நமக்கு விடுதலை அளிப்பவரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரே, உமது அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.

நீதியின் கதிரவனே! அமல உற்பவியான கன்னிமரியாவில் உமது நாளை உதயமாகச் செய்தீர் — உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும்.

என்றும் வாழும் வார்த்தையே! மரியாவின் உயிருள்ள சதையில் நீர் ஓர் உறைவிடத்தை இப்புவியில் கண்டுகொண்டீர் — பாவக் கறையிலிருந்து விடுதலை பெற்ற எங்கள் உள்ளங்களில் என்றும் தங்கியருளும்.

எங்களுக்கு விடுதலை அளிப்பவரான கிறிஸ்துவே! நீர் இறக்கும்போது அருகில் உம் தாயும் இருக்கவேண்டும் எனத் திருவுளம் கொண்டீர் — அவரது பரிந்துரையால் நாங்களும் உமது பாடுகளில் பங்கு பெறுவதில் மகிழ்வோமாக.

அன்புநிறை விடுதலை அளிப்பவரே! சிலுவையில் நீர் தொங்கிய போது உம் தாய் மரியாவை யோவானுக்குத் தாயாகக் கொடுத்தீர் — எங்களது நல் வாழ்க்கையால் நாங்கள் அவரது பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துவோமாக.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: இறைவா, என் உடல் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

ஆண்டவரே என் உரிமைச் சொத்து

திபா 16

கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தொழச் செய்தார். (திப 2:24)

இறைவா, என்னைக் காத்தருள்வீர்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம்
‘நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’
என்று சொன்னேன்.

பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்!
அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
வேற்றுத் தெய்வங்களைத் தொழுவோர்
தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில்
நான் கலந்துகொள்ளேன்;
அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.

ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன;
உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகிறேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன்.

என் இதயம் மகிழ்கிறது; என் உள்ளம் அக்களிக்கிறது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறும்.
ஏனெனில் என்னைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர்;
உம் அன்பன் நான் படுகுழியைக் காணவிடமாட்டீர்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இறைவா, என் உடல் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.


அருள்வாக்கு

1 தெச 5: 23

அமைதி அருளும் கடவுள் தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது, உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

எங்கள் ஆண்டவராகிய கடவுளே! இந்நாளில் உழைப்பால் நாங்கள் மிகவே சோர்வடைந்துள்ளோம்; அமைதியான உறக்கத்தால் எங்களைப் புதுப்பித்தருளும். இவ்வாறு, உமது உதவியால் சோர்வு நீங்கிய நாங்கள் உடலாலும் உள்ளத்தாலும் உமக்குப் பணிபுரிவோமா. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...