Wednesday, August 31, 2022

Daily Prayers - அன்றாட செபம் (1-09-2022)


காலை ஜெபம். 

என் ஆண்டவர் இயேசுவே,

மாறா அன்பர்களுக்கு மாறா அன்பரே! உம்மை துதிக்கின்றேன். தூயவரே! என் வாழ்விற்கு ஒளி ஊட்டியவரே! உம்மை புகழ்ந்து பாடுகின்றேன். துணை வேண்டி உம்மை கூவி அழைத்தேன், விண்ணில் இருந்து விடை தந்தீரே! நன்றி கூறுகின்றேன். “இன்னும் நான் வளர்ச்சி அடையவில்லை. குழந்தை போல், அறிவுரை தவறும் மனதிலே உலகில் வாழ்கின்றேன்" என புனித பவுல் கிறிஸ்தவ வாழ்வின் நிலையை எடுத்து காட்டுவதை இறை வார்த்தையில் வாசிக்கின்றேன். தூய ஆவிக்குரிய இயல்பில் நிலைத்து வாழாமலும்; உம்மில் நிலைத்து வளராமலும்; ஊனியல்பின் பிடியில் வாழ்வை அழித்து கொண்டு இருக்கும் என் வாழ்வை பாதுகாரும். இயேசுவே! நீரே என்னில் விழைச்சலை உருவாக்க முடியும்; உம்மாலே என்னை பண்படுத்தி பயன்டுத்த முடியும்; என்னை முழுமையாக முழு மனதுடன் உமக்கு கையளிக்கின்றேன்; என்னை உமது பிள்ளையாக உருவாக்கும் உருமாற்றும். ஆண்டவரே இயேசுவே! வார்த்தையை அனுப்பி குணப்படுத்தி வாழ்வளிக்கும் இறைமகனே! இன்றைய நாளில் என் வாழ்வை தொடும்; என் ஆன்மாவை தொடும்; பேதுருவின் மாமியாரின் நோயை கடிந்து சுகப்படுத்தியவரே! என்னையும் குணமாக்கும். முழு மனதுடன் ஊழியம் செய்திட எனக்கு ஆசீர் தாரும்; இன்று என் வாழ்வை ஆசீர்வதியும்; நன்மைகளாலும், நன்மையான ஏவுதல்களாலும் என் வாழ்வை நிரப்ப வேண்டுமாய் இயேசுவின் தூய நாமத்தால் ஜெபிக்கின்றேன்.

ஆமென்!. 


மதிய செபம்

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 

(எசாயா 12:2)


எங்களின் ஆற்றலும் மீட்புமான இறைவா! இந்த மதிய வேளைக்காய் நன்றி கூறுகின்றோம். எங்கள் அனைவரின் ஆற்றலுமாகவும் மீட்புமாகவும் நம்பிக்கையாகவும் நீரே இருக்கிறீர். நாங்கள் நம்பிக்கை இழந்து போகும் போதும் இருள் சூழ்ந்த பாதையில் நடக்கும் போதும் உமது மேல் உள்ள நம்பிக்கையும் உமது ஆறுதலிக்கும் வார்த்தைகள் மட்டுமே ஒவ்வொரு சூழலிலும் எங்களை வழிநடத்தி வருகின்றன.  இதே நம்பிக்கை நிறைந்த பாதையிலே நாங்கள் தினம் தினம் வழிநடக்க எங்கள் மனங்களை திடப்படுத்தும் நம்பிக்கையின் நாயகனே! ஆமென்.


இரவு செபம்

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.  உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும். 

(எசாயா 64:8-9)


குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும். ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும்குணப்படுத்தலுக்காகவும்  தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும். ஆமென்

Daily Saint - இன்றைய புனிதர் (1-09-2022)

 † இன்றைய புனிதர் †



(செப்டம்பர் 1)

✠ புனிதர் கைல்ஸ் ✠
(St. Giles)

மடாதிபதி:
(Abbot)

பிறப்பு: கி.பி. 650
ஏதென்ஸ், அச்செயா, கிழக்கு ரோமப் பேரரசு
(Athens, Achaea, Eastern Roman Empire)

இறப்பு: செப்டம்பர் 1, 710
செப்டிமேனியா, விஸிகோத் அரசு, (தென் ஃபிரான்ஸ்)
(Septimania, Kingdom of the Visigoths (Languedoc, Southern France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் கைல்ஸ் துறவு மடம், ஃபிரான்ஸ்
புனிதர் கைல்ஸ் தேவாலயம், எடின்பர்க், ஸ்காட்லாந்து
(Abbey of Saint-Gilles (Saint-Gilles, France)
St. Giles' Cathedral (Edinburgh, Scotland)

பாதுகாவல்:
பிச்சைக்காரர்கள்; கொல்லர்கள்; மார்பக புற்றுநோய்; தாய்ப்பால் ஊட்டுதல்; புற்றுநோயாளிகள்; ஊனமுற்றோர்; எடின்பர்க் (ஸ்காட்லாந்து); வலிப்பு; காடுகள்; துறவிகள்; குதிரைகள்; தொழு நோயாளிகள்; மன நோய்; தீயவர்கள்; ஏழை மக்கள்; ஆட்டுக்கடா; தூண்டுகோல் தயாரிப்போர்; மலட்டுத்தன்மை.

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 1

புனிதர் கைல்ஸ், ஏதேன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கிரேக்க துறவியும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவரது சரிதம், “புரோவென்ஸ்” (Provence) மற்றும் “செப்டிமீனியா” (Septimania) பிராந்தியங்களை மையமாக கொண்டதாகும். “தூய கைல்ஸ்-டு-கர்ட்” (Saint-Gilles-du-Gard) எனுமிடத்தில் இவர் நிறுவிய துறவு மடம், இவரது சமாதியாகவும் பிரபல திருயாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகின்றது. இவர், பதினான்கு தூய (Fourteen Holy Helpers) உதவியாளர்களில் ஒருவராவார்.

கைல்ஸ் ஆரம்பத்தில் இன்றைய தென் ஃபிரான்ஸ் நாட்டின் “செப்டிமானியாவில்” (Septimania) “கர்ட்” நதி (River Gard) மற்றும் “ரோன்” (Rhône) நதிகளின் முகத்துவாரத்தில் வசித்தார். இவர், “ஏதென்ஸ்” (Athens) நாட்டின் அரசனான “தியோடோர்” (King Theodore) மற்றும் அரசி “பெலஜியா” (Queen Pelagia) ஆகியோரின் மகன் என்ற கூற்று முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கற்பனையே என்று ஆரம்பகால சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இறுதியில், “நிமேஸ்” (Nîmes) பிராந்தியத்தினருகேயுள்ள அடர்ந்த காடுகளின் உட்பகுதிகளுக்கு பின்வாங்கிச் சென்ற இவர், பல ஆண்டு காலம் அங்கேயே தீவிர தனிமையில் வாழ்ந்தார். அவருக்கு துணையாக ஒரு மான் மட்டுமே எப்போதும் உடன் இருந்தது என்பர். பலவேளைகளில், தமது பால் தந்து இவரது பசியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

கைல்ஸ், புலால் உணவு உண்பதை முற்றிலும் தவிர்த்திருந்தார். இந்த பின்வாங்கல், அரசனின் வேட்டைக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தஞ்சம் அடைந்த இடத்திலேயே அடைக்கலம் புகுந்தார். ஒருமுறை, இவரது மானை நோக்கி வீசப்பட்ட அம்பு ஒன்று, இவரை தைத்தது. இவர் காயமடைந்தார். இதனால், பின்னாளில் இவர் ஊனமுற்றோரின் பாதுகாவலர் ஆனார்.

வரலாற்று அமைப்பின் காரணமாக, “விசிகோத்” (Visigoth) அரசனான “வம்பா” (Wamba) ஒரு கபடமற்றவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அரசன் “வம்பா”, துறவி கைல்சை அவரது பணிவின் காரணமாக, மிகவும் மரியாதையாக நடத்தினார். அரசன் வம்பா, இவருக்காக பள்ளத்தாக்கில் “புனிதர் கைல்ஸ் துறவு மடம்” (Saint-Gilles-du-Gard) எனும் துறவு மடத்தை கட்டி கொடுத்தார். கைல்ஸ், துறவு மடத்தில் “பெனடிக்டைன்” (Benedictine rule) ஒழுங்கு விதிகளை அமல்படுத்தினார்.

கைல்ஸ், தமது துறவு மடத்திலேயே, புனிதத்தன்மை மற்றும் அற்புதங்களின் மிக உயர்ந்த புகழுடன் 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரித்தார்.

இங்கிலாந்தில், பல பண்டைய தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகள் கைல்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. “புருஸ்ஸல்ஸ்” (Brussels) நகரின் ஒரு பகுதிக்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில், 14 பரிசுத்த உதவியாளர்கள் என அழைக்கப்படுபவர்களுள் ஒருவராக கைல்ஸ் உட்படுத்தப்பட்டுள்ளார். நோயிலிருந்து மீள்வதற்காகவும், மரண வேளையில் வல்லமைக்காகவும் இந்த பரிசுத்த உதவியாளர்களை நோக்கி செபிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஜேர்மனி, ஹங்கேரி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் "பரிசுத்த உதவியாளர்களுக்கான" பக்தி தீவிரமாக உள்ளது. அத்தகைய பக்தியால் அவரது புகழ் பரவியது. கைல்ஸ் விரைவிலேயே ஏழைகள் மற்றும் ஊனமுற்றோரின் பாதுகாவலரானார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
தூய கைல்ஸின் நினைவுத் திருநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தூய கைல்ஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. அவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையை நாடுபவராகவே இருந்தார். பிற்காலத்தில் பிலாவியஸ் மன்னன் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்தபோதும், “எனக்கு அந்த வாழ்க்கை வேண்டாம், நான் இப்படியே வாழ்ந்துகொள்கின்றேன்” என்பதுதான் அவருடைய பதிலாக இருந்தது. இவ்வாறு அவர் அவராகவே இருந்தார். யாரையும் போன்று அவர் வாழ விரும்பவில்லை. நாம் நாமாக வாழ ஆசைப்படுகின்றோமா? அல்லது மற்றவரைப் பார்த்து அவரைப் போன்ற வாழ முயற்சிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாம் நாமாக, நம்முடைய தனித்தன்மையோடு இருப்பதே சிறப்பு. ஆகவே, தூய கைல்ஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர் எப்படி அவராக வாழ்ந்தாரோ, அதுபோன்று நாம் நாமாக வாழ முயற்சிப்போம். எப்போதும் இறைவழியில் நடப்போம். இறையருள் நிறைவாய் பெறுவோம். ஆமென்! †
--------------------------------------------------------------
† Saint of the Day †
(September 1)

✠ St. Giles ✠

Abbot:

Born: 650 AD
Athens, Achaea, Eastern Roman Empire

Died: 710 AD
Septimania, Kingdom of the Visigoths (Languedoc, Southern France)

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Anglican Communion

Major Shrine:
Abbey of Saint-Gilles (Saint-Gilles, France)
St. Giles' Cathedral (Edinburgh, Scotland)

Feast: September 1

Patronage :
Beggars; Blacksmiths; Breast Cancer; Breastfeeding; Cancer Patients; Disabled People; Edinburgh (Scotland); Epilepsy; Noctiphobics; Forests; Hermits; Horses; Lepers; Mental Illness; Outcasts; Poor People; Rams; Spur Makers; Sterility.

Saint Giles also is known as Giles the Hermit was a Greek, Christian, hermit saint from Athens, whose legend is centred in Provence and Septimania. Giles founded the abbey in Saint-Gilles-du-Gard whose tomb became a place of pilgrimage. It was a stop on the road that led from Arles to Santiago de Compostela, the pilgrim Way of St. James. Giles is one of the Fourteen Holy Helpers.

Born to a wealthy noble family, when his parents died, Giles gave his fortune to help the poor. Known as a miracle worker. To avoid followers and adulation, he left Greece c.683 for France where he lived as a hermit in a cave in the diocese of Nimes, a cave whose mouth was guarded by a thick thorn bush, and a lifestyle so impoverished that, legend says, God sent a deer to Giles to nourish him with her milk.

One day after he had lived there for several years in meditation, a royal hunting party chased the hind into Giles’ cave. One hunter shot an arrow into the thorn bush, hoping to hit the deer, but instead hit Giles in the leg, crippling him. The king sent doctors to care for the hermit‘s wound, and though Giles begged to be left alone, the king came often to see him.

From this, Gile’s fame as sage and miracle worker spread, and would-be followers gathered near the cave. The French king, because of his admiration, built the monastery of Saint Gilles du Gard for these followers, and Giles became its first abbot, establishing his own discipline there. A small town grew up around the monastery, and upon Giles’ death, his grave became a shrine and place of pilgrimage; the monastery later became a Benedictine house.

The combination of the town, monastery, shrine, and pilgrims led to many handicapped beggars hoping for alms; this and Giles’ insistence that he wished to live outside the walls of the city, and his own damaged leg, led to his patronage of beggars, and to cripples since begging was the only source of income for many. Hospitals and safe houses for the poor, crippled, and leprous were constructed in England and Scotland and were built so cripples could reach them easily. On their passage to Tyburn for execution, convicts were allowed to stop at Saint Giles’ Hospital where they were presented with a bowl of ale called Saint Giles’ Bowl, “thereof to drink at their pleasure, as their last refreshing in this life.”

In Spain, shepherds consider Giles the protector of rams. It was formerly the custom to wash the rams and colour their wool a bright shade on Giles’ feast day, tie lighted candles to their horns, and bring the animals down the mountain paths to the chapels and churches to have them blessed. Among the Basques, the shepherds come down from the Pyrenees on 1 September, attired in full costume, sheepskin coats, staves, and crooks, to attend Mass with their best rams, an event that marks the beginning of autumn festivals, marked by processions and dancing in the fields. One of the Fourteen Holy Helpers, the only one not to die as a martyr. 

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (1-09-2022)

 பொதுக்காலம் 22ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்



நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-23

சகோதரர் சகோதரிகளே,

எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.” மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.” எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

அக்காலத்தில்

இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.

இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------

தாழ்ச்சியின் ஆழத்தில் தான் உயர்வு!


விண்ணிலே வீரியமாய் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென வழிதவறிச்செல்ல ஆரம்பித்தது. விமான ஓட்டியின் அஜாக்கிரதையால் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டது. இக்கட்டான சூழ்நிலை உருவானபோதும் விமான ஓட்டிகள் எப்படியாவது நிலைமையை சரிசெய்துவிடலாம் என்று போராடினார்கள். இதைப்பற்றி அறியாத பயணிகள் கவலையின்றி நிம்மதியாக பயணத்தைத் தொடர்ந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே விமானிகள் பயணிகளிடம் அறிவிப்பு செய்யத்தொடங்கினர். விமானம் பாதை தவறியதால் பெரிய ஆபத்து இருப்பதாகவும், பயணிகள் பாராசூட் அணிந்துகொண்டு கீழே குதித்து தங்களை காப்பாற்றிக்கொள்ளுமாறும்  அறிவிப்பு வந்தது. விமானம் முழுவதும் அச்சத்தால் நிரம்பியது. பயணிகள் அழவும் அலறவும் தொடங்கினர். செய்வதறியாது திகைப்பில் இருந்த சமயத்தில் ஒரு மனிதர் பயப்படாதீர்கள், நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கத்தினார். அதைக்கேட்ட அனைவரும் அந்த மனிதரை ஏளனமாக திட்டத்தொடங்கினர்.

அவர் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தார். கைதேர்ந்த விமான ஓட்டிகளாலேயே பிரச்சினையை தீர்க்க இயவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும் என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர அந்த மனிதரின் குரலை யாரும் கேட்ட பாடில்லை. இறுதியில் அவர் அனைவரையும் அமைதிப்படுத்தி விட்டு வேகமாக விமான ஓட்டிகளின் அறைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் விமானம் சரியான பாதைக்கு திரும்பியது. அனைவரும் பத்திரமாக தங்கள் இடங்களுக்குத் திரும்பினர். அப்பொழுதுதான் அந்த மனிதர் அஸ்ட்ரானமி எனச்சொல்லப்படும் வானியலைக் கற்றவர் எனபது அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் தகுந்த நேரத்தில் செய்த உதவி பலருடைய உயிரைக்காப்பாற்றியது. யாரையும் குறைவாக எடை போடக்கூடாது என்பதையும் தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தவறானது என்பதையும் பயணிகள் உணர்ந்து கொண்டனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதைப்போன்ற நிகழ்வை காண்கிறோம். காலம் காலமாய் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்களுக்கு, கடலில் எங்கு மீன் கிடைக்கும், எந்த பருவகாலத்தில் மீன்பாடு நன்றாக இருக்கும், எந்தப் பருவத்தில் எந்த வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற அறிவும் அதைவிட அனுபவமும் அதிகமாகவே இருக்கும். மீனவரான சீமோனும் தன் தொழிலில் நிச்சயம் நுணுக்கங்களை அறிந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் தான் இரவு முழுதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்காமல் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனிடம் ஆழத்தில் வலை வீசச் சொல்கிறார் இயேசு. சீமோன் நினைத்திருந்தால் எங்களை விடவா உமக்கு அறிவும் அனுபவமும் அதிகம் என்று எண்ணிக்கொண்டு இயேசுவின் பேச்சை கேட்காமல் போயிருக்கலாம். ஆனாலும் ஒரு போதகர் சொல்கிறார் முயற்சி செய்து பார்ப்போம் என்ற பணிவுடன் அவர் மீண்டும் ஆழத்தில் வலைவீச ஏராளமான மீன்கள் கிடைத்தது. அப்போது தான் அவர் தன்னுடைய வெறுமையை உணர்ந்தார். தன்னைத் தாழ்த்தினார். தாழ்த்தியதால் இயேசுவின் பெருமையை அறிந்து அவருக்கு சொந்தமானார். 

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு என்ற சொல்வழக்கு நாம் அறிந்ததே. நாம் அனைவரும் அறிந்தவைகள் கொஞ்சமே. கல்லாதவை கடலளவு இருக்க,  அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு எனக்கெல்லாம் தெரியும் என்ற பெருமையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் நம்மை விட பிறரை தாழ்வாக எண்ணுகிறோம். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பணிவு நம்மிடம் இல்லாமலேயே போய்விடுகிறது. இந்த மனநிலையை மாற்றவே இயேசு நம்மை அழைக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் அக்கறையுடன் பிறர் கூறும் ஆலோசனைகளை பணிவுடன் ஏற்றால் நமக்கு வெற்றி நிச்சயம்.

இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுலின் வார்த்தைகள் மூலம் கடவுள் நமக்கு கூறும் செய்தி நாம் நமது ஞானத்தைக் குறித்து  பெருமை பாராட்டக் கூடாது என்பது தான். ஞானம் கவுளிடமிருந்துதான் வருகிறது. அந்த ஞானத்தால் நாம் அடைகின்ற பெயரும் புகழும் கடவுளுக்கே உரியது என்பதையும் நாம் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். எவ்வாறு சீமோன் தன் தாழ்ச்சியினால் இயேசுவைப் பின் தொடர்ந்து அவர் சொந்தமானாரோ அதைப்போல நாமும் நம் வீண் பெருமைகளைக் களைந்து கடவுள் முன் நம்மைத் தாழ்த்தி அவருக்கு உரியவர்களாவோம். அதற்கான வரத்தை அவரிடம் பணிவுடன் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

எங்களுக்கு அனைத்தையும் அருள்பவரே இறைவா! ஞானமும் அறிவும் உம்மிடமிருந்தே வருகின்றன. ஆனால் அதைப் பெற்றுக்கொண்ட நாங்களோ வீண் பெருமை பாராட்டுவதோடு பிறரையும் குறைவாக மதிப்பிடுகிறோம். இன்று நாங்கள் உம்முன் பணிந்து அறிக்கையிடுகிறோம். தாழ்ச்சியுடன் வாழ்ந்து உமக்கு பெருமை சேர்க்கும் உமது மக்களாக வாழ எமக்கு அருள் தாரும். மேலும் கடினமாக சூழல்களில் அன்புடன் பிறர் கூறும் ஆலோசனைகளின் மூலம் உமக்கு செவி சாய்த்து வாழ்வில் முன்னேறும் வரம் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

-------------------------------

“அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்”


நிகழ்வு

பதினொன்றாம் நூற்றாண்டில், காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ மன்னருக்கு இணையாக மிகப்பெரிய செல்வந்தராய் வாழ்ந்து வந்தவர் பட்டினத்தார். கடல் வணிகம் செய்து வந்ததால், பட்டினத்தாரிடம் அவ்வளவு செல்வம் இருந்தது. இதனால் மக்கள் இவரை இவருடைய இயற்பெயரான திருவெண்காடர் என்று அழைப்பதற்குப் பதில், பட்டினத்தார் என்றே அழைத்து வந்தனர்.

இவருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவனை இவர் கடல் வணிகத்திற்கு அனுப்பி வைத்தார். போனவன் நீண்ட நாள்களாகத் திரும்பி வரவில்லை. ‘தன் மகனுக்கு என்ன வாயிற்று?’ என்று இவர் நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் அவன் திரும்பி வந்தான். ‘கடல் வணிகத்திற்குச் சென்றவன், நிறையச் சம்பாத்தித்து வந்திருப்பான்’ என்று இவர் எதிர்பார்த்தார். ஆனால், இவர் நினைத்ததற்கு மாறாக, எருவிராட்டியையும் தவிடையும் அவன் கொண்டு வந்திருந்தான்.

இதைக் கண்டு சினமுற்ற பட்டினத்தார் அவனை கடுமையாகத் திட்டித் தீர்த்தார். இதனால் அவன் மிகுந்த வருத்தத்தோடு தன் தாயிடம் சென்றான். பின்னர் அவன் ஓர் ஓலைத் துணுக்கில் ‘காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’ என்ற வார்த்தைகளை அவரிடம் கொடுத்துவிட்டு அப்படியே ஓடிப்போய்விட்டான். பட்டினத்தார் இவ்வார்த்தைகளைப் படித்துப் பார்த்தார். ‘காதற்ற ஊசி கடையில் விற்பனைக்கு வராது...! அப்படியானால், நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் கடைசிவரைக்கும் வராதுதானே! என்ற உண்மையை உணர்ந்தவராய் ஞானம் பெற்றார்.

இதற்குப் பிறகு இவர் தன்னுடைய செல்வம், மனைவி எல்லாவற்றையும் துறந்து, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.

மிகப்பெரிய செல்வந்தரான பட்டினத்தார் ஞானமடைந்ததும் எப்படி எல்லாவற்றையும் துறந்து துறவியானாரோ, அப்படி மிகுதியான மீன்பாட்டைக் கண்டதும், பேதுருவும் யாக்கோபும் யோவானும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள். லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காத நிலை!

நற்செய்தியில் இயேசு கெனசரேத்து ஏரிக்கு வருகின்றனர். அங்குத் திரளான மக்கள் அவருடைய போதனையைக் கேட்க, அவரை நெருக்கிக் கொண்டிருந்ததால், அவர் சீமோன் பேதுருவின் படகில் ஏறி அமர்ந்து, மக்களுக்குப் போதிக்கின்றார். பின்னர் அவர் பேதுருவிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கின்றார். அவரோ, “இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகின்றேன்” என்கின்றார்.

பேதுரும் அவருடன் இருந்தவர்களும் மீன்பிடிப்பதையே தங்களுடைய தொழிலாகக் கொண்டவர்கள் (யோவா 21: 2-3) அப்படிப்பட்டவர்களுக்கே மீன் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது, மனிதர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. அதேநேரத்தில் பேதுரு இயேசுவின் வார்த்தைகளை நம்பி வலைவீசியதும், மிகுதியான மீன் கிடைப்பது, ஆண்டவரால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1: 37) என்ற உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய ஆற்றலால் எதையும் செய்துவிடலாம் என்று நினைக்கின்றோம். உண்மையில் நமது ஆற்றலால் மட்டும் எதையும் செய்ய முடியாது. புனித பவுல் சொல்வது போன்று, நமக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும் (பிலி 4: 13)

ஆண்டவரின் வல்லமையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்தல்

இயேசு தன்னிடம் சொன்னதுபோன்று பேதுரு கடலில் வலையை வீச, மிகுதியான மீன்பாடு கிடைத்ததைப் பார்த்துவிட்டு, அவர் தன்னுடைய தகுதியற்ற நிலையை உணர்ந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்” என்கின்றார். அப்பொழுதுதான் இயேசு பேதுருவிடம், ‘இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்கின்றார்.

இயேசு பேதுவையும் யாக்கோபையும் யோவானையும் முன்னதாகவே தன்னுடைய பணிக்காக அழைத்திருந்தார் (மத் 4: 19). அவர்களோ தங்களுடைய அழைப்பின் மேன்மையை உணராமல், வழக்கம் போல் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். இந்நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு, மலைத்துப் போய், அவர்கள் இயேசு சாதாரணமானவர் கிடையாது; ஆண்டவர் என உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்கின்றார்கள்.

ஆம், நம்மை அழைப்பது சாதாரணமாணவர் கிடையாது. இறைமகன். ஆகையால், நாம் அவருடைய அழைப்பின் மேன்மையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்து செல்வோம்


சிந்தனை

‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16: 25) என்பார் இயேசு. எனவே, நாம் தன்னலத்தைத் துறந்து, சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-----------------------

 “இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது”


பெரியவரின் அறியாமை!

ஒருநாள் காலை வேளையில், ஒரு பெரிய ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு, சிறுவன் ஒருவன் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து, அவன் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். அவரும் சிறுவனைப் போன்று ஆற்றில் உற்சாகமாக மீன்பிடிக்கத் தொடங்கினார். 

நேரம் கடந்துபோனது இருவரும் பலவற்றையும் குறித்துப் பேசிக்கொண்டார்கள். மாலை வேளையில், தொலைவில் ஒரு சிறு கப்பல் வருவதைப் பார்த்து, சிறுவன் அதை நோக்கிக் கையசைத்தான். அப்போது பெரியவர் அவனிடம், “தொலைவில் வரும் கப்பலைப் நோக்கிக் கையசைக்கின்றாயே! அது இங்கு வரும் என்று நினைக்கிறாயா?” என்றார்.   “ஆம். அது இங்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கின்றது” என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து மீன்பிடிக்கத் தொடங்கினான் அவன். 

“எங்கோ இருக்கும் கப்பல் இங்கு வரும் என்று சொல்கின்றாய். உண்மையில் நீ ஒரு சரியான முட்டாள்” என்று பெரியவர் சிறுவனைக் கரித்துக் கொட்டத் தொடங்கினார். சிறுவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். சிறிது நேரம் கழித்துத் தொலைவில் இருந்த கப்பல் அருகில் வந்தது. அதைப் பெரியவர் வியப்போடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கப்பலில் இருந்த ஒருவர் சிறுவனை உள்ளே ஏற்றினார். அவன் கப்பலில் ஏறியபிறகு, பெரியவரைப் பார்த்து, “நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இந்தக் கப்பல் இங்கு வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில், இந்தக் கப்பலின் தளபதி என்னுடைய தந்தை” என்றான். இதைக் கேட்டதும் பெரியவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவரைப் போன்று  ஒருசிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக்கொண்டு, முடிவில் அவமானப்படுவதுண்டு. இன்றைய இறைவார்த்தை, “இவ்வுலக ஞானம் கடவுளுக்கு முன் மடமையாய் உள்ளது” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்று சொல்லிக்கொண்டு, அதன் நிமித்தம் பிளவுபட்டு இருந்தார்கள்; தங்களையே ஞானிகளாகக் கருதிக்கொண்டார்கள். அப்போதுதான் பவுல் அவர்களிடம், “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது” என்கிறார். தன்னுடைய கூற்றை எண்பிக்க அவர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார் (யோபு 5:13; திபா 94:11).

இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது என்பதற்குச் சான்றாய் இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். மீன்பிடிப்பதில் கைதேர்ந்தவர் பேதுரு. ஆனாலும் அவர் இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போதுதான் இயேசு அவரிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னபோது, ‘சாதாரண தச்சரின் மகனான இவருக்கு மீன்பிடிப்பதைப் பற்றி என்ன தெரியும்?’ என்று பேதுரு நினைக்கவில்லை. மாறாக, அவர் இயேசு சொன்னது போன்று செய்கின்றார். அதனால் மிகுதியான மீன்கிடைக்கின்றது. 

இங்கு நாம் கருத்தில் கொண்ட செய்தி, மனித ஞானத்தை மட்டுமே நாம் நம்பிக்கைக் கொண்டிருந்தால் அது தோல்வியில்தான் முடியும். எப்போது நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது வார்த்தையின்படி நடக்கின்றோமோ அப்போது நமக்கு வெற்றிக்கு மேல் வெற்றி குவியும். 


சிந்தனைக்கு:

மனிதரால் ஒன்றும் முடியாது; ஆண்டவரால் எல்லாம் முடியும். 

எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிவதே ஞானம் 

ஆண்டவருக்குக் கீழ்ப்படிவோர் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை. 


இறைவாக்கு:

‘...ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்’ (மத் 11:25) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் ஞானம் நமக்குக் கிடைக்க, சிறு பிள்ளைகளாய் மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

-----------------------------------------

“ஆண்டவரின் மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?”


மழுங்கடிக்கப்படும் மனச்சாட்சி:

சேவியரா ஹோலந்தர் (Xeviera Hollander) என்பவர் எழுதிய ஒரு முக்கியமான நூல் ‘The Happy Hooker’. இந்தச் சேவியரா ஹோலந்தர் ஒரு விலைமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்யும் இவர், முதன்முறையாக இத்தொழிலில் ஈடுபட்டபோதுதான் தனக்குக் குற்ற உணர்ச்சியாக இருந்தது என்றும், காலப்போக்கில் அது முற்றிலுமாக மறைந்துவிட்டது என்றும் கூறுகின்றார். தவிர, விபச்சாரத் தொழிலுக்கு யாரும் விரும்பி வருவதில்லை என்ற கருத்திற்கு மாறாக இவர், அத்தொழிலுக்குத் தான் விரும்பி வந்ததாகவும், அதில் மகிழ்ச்சி காண்பதாகும் குறிப்பிடுகின்றார். 

இப்படி எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் விபசாரத்தில் ஈடுபட்ட இவர், கோயில் மணியோசையைக் கேட்க நேர்ந்தால், அது தன்னுடைய மனச்சாட்சி வெகுவாக உலுக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். 

சேவியரா ஹோலந்தரின் வாழ்க்கையை நாம் தீர்ப்பிடுவதற்கு இல்லை. ஆனால், பலர் இன்றைக்குத் தங்கள் மனச்சாட்சியை மழுங்கடித்து, பாவத்திற்கு மேல் பாவம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவரே ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர்” என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

தாவீது மன்னரால் உடன்படிக்கைப் பேழை எருசலேம் திருநகருக்குக் கொண்டு வரப்பட்ட பின்னணியில் பாடப்பட்டதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 24. 

இத்திருப்பாடலுக்கும் திருப்பாடல் 15 க்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஏனெனில், இரண்டு திருப்பாடல்களுமே ஆண்டவருடைய இல்லத்திற்கு, அவரது மலைக்கு யாரெல்லாம் செல்ல முடியும் என்ற சிந்தனையைத் தருகின்றன. ஆண்டவர் தூயவர் (லேவி 19:2) அதனால் அவரை அணுகிச் செல்லும் யாவரும், தூயவராய், மாசற்றவராய் வாழ்வது  மிகவும் முக்கியமானது.

கறைபடாத கைகளை உடையவரும் மாசற்ற மனம் கொண்டவரும், பொய்த் தெய்வங்களை வழிபடாதவரும், வஞ்சக நெஞ்சத்தோடு ஆணையிட்டுக் கூறாதவரும் மட்டுமே ஆண்டவரின் மலையில் ஏறத் தகுதியுடையவர் என்று கூறும் இத்திருப்பாடல், நாம் அத்தகையதோராய் வாழ அழைக்கின்றது. 


சிந்தனைக்கு:

தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவர் குடிகொண்டிருக்கின்றார் என்பதை உணரும் ஒருவர் அவருக்கு எதிராகச் செயல்படமாட்டார். 

குற்றத்தை உணராமையே மிகப்பெரிய குற்றம். 

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போருக்கு மிகுந்த ஆசி உண்டு. 


இறைவாக்கு:

‘இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது’ (திவெ 21:3) என்கிறது திருவெளிப்பாடு நூல். எனவே, கடவுளின் உறைவிடம் நம் நடுவில் இருக்க, நாம் கடவுளைப் போன்று தூயோராய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

Tuesday, August 30, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (31-08-2022)

 † இன்றைய புனிதர் †



(ஆகஸ்ட் 31)

✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠
(St. Joseph of Arimathea)

இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர்:
(Secret Disciple of Jesus)

பிறப்பு: ----

இறப்பு: ----
பழைய எருசலேம் நகரிலுள்ள “தூய செபுல்ச்ர்”, சிரியாக் மரபுவழி சிற்றாலயம்
(Syriac orthodox Chapel in Holy Sepulchre)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 31

பாதுகாவல்: நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது.
மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது.
யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது.

இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்துவிடம் (Pilate) அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதி செய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.

“நிக்கதேம்” (Nicodemus) துணையோடு “கொல்கொதாவில்” (Golgotha) இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருட்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.
------------------------------------------------------

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 31)

✠ புனிதர் நிக்கதேம் ✠
(St. Nicodemus)

கிறிஸ்துவின் பாதுகாவலன்:
(Defender of Christ)

பிறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு
யூதேயா
(Judea)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 31

பாதுகாவல்: ஆர்வமுள்ளவர்களின் (Curious)

புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு “பரிசேயரும்” (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார்.

இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்:

முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21)
இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. (யோவான் 7: 50-51)

இறுதியாக, அரிமத்தியா யோசேப்புவுக்கு (Joseph of Arimathea) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இவர் உதவியதாக கூறுகின்றது. (யோவான் 19:39-42)

இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடிய பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக யோவான் 3:16 நற்செய்தியின் சுறுகம் என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறிஸ்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை (Born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.

4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத “நிக்கதேம் நற்செய்தி” (Gospel of Nicodemus) என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.

கிறிஸ்தவ மரபுப்படி இவர் 1ம் நூற்றாண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.
--------------------------------------------------------------------
† Saint of the Day †
(August 31)

✠ St. Joseph of Arimathea ✠

Secret Disciple of Jesus:

Born: Not known

Died: Not known

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Oriental Orthodox Church
Anglican Communion
Lutheranism

Feast: August 31

Patronage: Funeral Directors

Joseph of Arimathea was, according to all four canonical Christian Gospels, the man who assumed responsibility for the burial of Jesus after his crucifixion. A number of stories that developed during the Middle Ages connect him with Glastonbury, where the stories said he founded the earliest Christian oratory, and also with the Holy Grail legend.

Joseph of Arimathea was quite an enigma! From history, we learn that he was previously known as Joseph de Marmore as he lived in Marmorica in Egypt before he moved to Arimathea.1 There is speculation that Joseph of Arimathea, or Joseph of Glastonbury as he later became known, was the uncle of Mary, mother of Jesus. His relationship with Mary made him a Great Uncle of Jesus. From this, we may presume that he was an elderly man at the time of the crucifixion. We have a few verifiable details about Joseph except that he was quite wealthy. Some claim that Joseph of Arimathea was a merchant in metals and took young Jesus with him on his business trips to England, India, and even to South America. It is a well-documented fact that Britain led the world at this time with its tin mining. Joseph of Arimathea was referred to by the Romans as 'Nobilis Decurio' or Minister of Mines to the Roman Government.

Joseph of Arimathea was not one of the original 12 apostles, but he was a disciple of Jesus and was an important man in his own right. He is mentioned in all four gospels (Matthew: 27:57-60; Mark 15:43-46; Luke 23:50-55; John 19:38-42). He was a high counsellor, a voting member of the Sanhedrin2 which officially wanted Jesus condemned to death. We may speculate that he had not consented to, or agreed with, the decision to push Pontius Pilate to impose the death penalty upon Jesus. In spite of his relationship with Jesus, his loyalty to Him was largely kept secret (John 19:38). Jesus was obviously unpopular with the elders of the church, and to outwardly support Him did not bring favour in their eyes (John 19:38).

Even though Joseph of Arimathea had attempted to keep his love for Jesus a secret, he boldly went to Pilate and asked for the body of Jesus to be placed in his trust. This is significant in and of itself. Joseph of Arimathea, not Mary Jesus' mother, not Mary Magdalene, or any of the apostles were entrusted with the act of taking Jesus down from the cross. Most of the apostles had fled anyway. Joseph took the body and put it in his own tomb. According to various historical sources, Joseph's actions provoked both the Roman and Jewish elders and he eventually did spend time in prison for his support of Jesus.

Other historical sources report that Joseph of Arimathea went on a preaching mission to Gaul with the apostle Phillip, Mary Magdalene, Lazarus, and others sometime between the years A.D. 37 and A.D. 63 (the year is in dispute). At Marseilles, Lazarus and Mary parted company with the main group who continued on further up North. When Joseph's party reached the English Channel, Phillip sent Joseph with 12 disciples to the furthest corner of the Roman Empire, the Island of the Britons. Legend has it that Joseph sailed around Land's End at the southern tip of England with the intent of catching up with old business acquaintances in the lead and tin mines. They ran aground in the Glastonbury marshes. Once again, it is reported that after climbing a nearby hill to survey the countryside, they were exhausted and Joseph thrust into the ground a staff made from the 'Holy Crown of Thorns' worn by Christ. He announced that he and his travelling companions were all weary. It is legendry that the thorn staff immediately took root and the thorn bush can still be seen today on 'Wearyall Hill.' Joseph built a church (Vetusta Ecclesia) with 5 of mud and wattle on the site and decreed that 12 monks should always reside in that most sacred place. It is interesting to note that a spirited shrub that grows near the now ruined Abbey is of the same type that grows in the Eastern Mediterranean and flowers only twice a year - Christmas time and Easter.

It is also claimed that Joseph collected some of the blood and sweat of Christ after His side was pierced as He hung on the cross. The chalice or cup which Joseph used to collect the fluids is reported to be the same one used during the last supper. Joseph took the cup with him on his voyage to England and is said to have hidden it on the site at Glastonbury, at the bottom of a deep well, called the 'Chalice Well', or the 'Blood Well.' The well is a rather curious place, 25 thousand gallons of red-tinted water pass through the good area each day. The red tint is caused by the high iron content in the water.
--------------------------------------------------------------------

† Saint of the Day †
(August 31)

✠ St. Nicodemus ✠

Defender of Christ:

Born: 1 BC

Died: 1 AD
Judea

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Oriental Orthodox Church
Anglican Communion
Lutheranism

Feast: August 31

Patronage: Curious

Nicodemus was a Pharisee and a member of the Sanhedrin mentioned in three places in the Gospel of John:
♪ He first visits Jesus one night to discuss Jesus' teachings (John 3:1–21).
♪The second time Nicodemus is mentioned, he reminds his colleagues in the Sanhedrin that the law requires that a person be heard before being judged (John 7:50–51).
♪Finally, Nicodemus appears after the Crucifixion of Jesus to provide the customary embalming spices and assists Joseph of Arimathea in preparing the body of Jesus for burial (John 19:39–42).

An apocryphal work under his name—the Gospel of Nicodemus—was produced in the mid-4th century, and is mostly a reworking of the earlier Acts of Pilate, which recounts the harrowing of Hell.

Although there is no clear source of information about Nicodemus outside the Gospel of John, the Jewish Encyclopedia and some historians have speculated that he could be identical to Nicodemus ben Gurion, mentioned in the Talmud as a wealthy and popular holy man reputed to have had miraculous powers. Others point out that the biblical Nicodemus is likely an older man at the time of his conversation with Jesus, while Nicodemus ben Gurion was on the scene 40 years later, at the time of the Jewish War.

As is the case with Lazarus, Nicodemus does not belong to the tradition of the Synoptic Gospels and is only mentioned by John, who devotes more than half of Chapter 3 of his gospel, a few verses of Chapter 7 and lastly mentions him in Chapter 19.

The first time Nicodemus is mentioned, he is identified as a Pharisee who comes to see Jesus "at night". John places this meeting shortly after the Cleansing of the Temple and links it to the signs which Jesus performed in Jerusalem during the Passover feast. "Rabbi, we know that you are a teacher who has come from God. For no one could perform the signs you are doing if God were not with him" (John 3:2).

Then follows a conversation with Nicodemus about the meaning of being "born again" or "born from above", and mention of seeing the "kingdom of God". Nicodemus explores the notion of being literally born again from one's mother's womb, but most theologians recognise that Nicodemus knew Jesus was not speaking of literal rebirth. Theologian Charles Ellicott wrote that "after the method of Rabbinic dialogue, [Nicodemus] presses the impossible meaning of the words in order to exclude it and to draw forth the true meaning. 'You cannot mean that a man is to enter the second time into his mother’s womb and be born. What is it, then, that you do mean?'"

Jesus expresses surprise, perhaps ironically, that "a teacher of Israel" does not understand the concept of spiritual rebirth. James F. Driscoll describes Nicodemus as a learned and intelligent believer, but somewhat timid and not easily initiated into the mysteries of the new faith.

In Chapter 7, Nicodemus advises his colleagues among "the chief priests and the Pharisees", to hear and investigate before making a judgment concerning Jesus. Their mocking response argues that no prophet comes from Galilee. Nonetheless, it is probable that he wielded a certain influence in the Sanhedrin.

Finally, when Jesus is buried, Nicodemus brought a mixture of myrrh and aloes—about 100 Roman pounds (33 kg)—for embalming Jesus' body according to Jewish custom. Nicodemus must have been a man of means; in his book, Jesus of Nazareth: Holy Week, Pope Benedict XVI observes that "The quantity of the balm is extraordinary and exceeds all normal proportions. This is a royal burial."

Nicodemus is venerated as a saint in the various Eastern Churches and in the Roman Catholic Church. In the current Roman Martyrology of the Catholic Church, Nicodemus is commemorated along with Saint Joseph of Arimathea on August 31. The Franciscan Order erected a church under the patronage of Saints Nicodemus and Joseph of Arimathea in Ramla


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...