Friday, September 2, 2022

Daily Prayers - அன்றாட செபம் (3-09-2022)

 

காலை ஜெபம். 

என் ஆண்டவர் இயேசுவே,

என் சார்பில் செயலாற்றும் உன்னதரே! உம்மை  துதிக்கின்றேன். என்னை கைதூக்கி நிலைத்திருக்க செய்தவரே! உம்மை புகழ்கின்றேன். என்றும் என்னுடன் தங்கும் துணையாளரே! நன்றி கூறுகின்றேன். “எவரும் புதிய ஆடையில் பழைய துணியால் ஒட்டுப் போடுவது இல்லை; என்றும், தீர்பிடாதீர்கள்” என்றும் இறைவார்த்தையில் வாசிக்கின்றேனே; இயேசுவே! பல தடவைகளில் மற்றவர்களை தீர்பிட்டு என்னையும் தீர்புக்குள்ளாக்கி உமக்கு எதிராக பாவம் செய்த என்னை மன்னியும். “தீர்பிடுவதும் கைமாறு அளிப்பதும் உமக்குரியது என்பதை மனதிலிருத்தி; நீர் எனக்கு தந்த பொறுப்பை மட்டும் செயல்படுத்த ஆற்றலும், ஞானமும் தாரும். இயேசுவே! ஒளியான நீர் உலகில் வந்திருந்தும் தீயதையும் பழையதையுமே விரும்பி தேடிய குற்றங்களை நினைத்து மனம் வருந்துகின்றேன்; பாவி என்னை ஏற்றுக்கொள்ளும். ஆண்டவரே இயேசுவே! நீர் உலகிற்கு கொண்டு வந்த அருளையும், உண்மையையும் என் வாழ்வில் ஏற்று வாழவும்; அதனால் வரும் இரட்சணியத்தை உமது பிள்ளையாக அனுபவித்து மகிழவும் கிருபை கூர்ந்தருளும்; இயேசையா! இன்றைய நாளில் நான் உம் வல்ல கரம் பற்றி வழிநடந்து; பழைய பாவங்களால் ஈர்க்கப்படாமலும்; பழைய பாவ வாழ்வை தேடிச் செல்லாமலும்; என்னை தூய ஆவியானவர் தடுத்து நிறுத்தவும் வேண்டுமாய் இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கின்றேன். 

ஆமென்.!


மதிய செபம்


எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர். 

(நீதிமொழிகள் 16:1)

     என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! இந்த மதிய வேளைக்காய் நன்றி கூறுகின்றோம். எங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் நீர் அறிந்தவராய் இருக்கிறீர். அவற்றை தக்க சமயத்தில் நிறைவேற்றித் தருபவராய் இருக்கிறீர். கொரோனா என்ற தொற்றின் தாக்கம் குறைய வேண்டும், இயல்பு நிலை மாற வேண்டும் என்பது எங்களின்  எண்ணமாக இருப்பினும் உம்முடைய எண்ணங்கள் திட்டங்கள் என்பது மறைவாய் இருக்கின்றன. அவற்றை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. நாங்களும் உம் மறைவான திட்டங்கள் வெளிப்படப்போகும் நாளுக்காகவும் எங்களின் விடுதலைக்காகவும் காத்திருக்கிறோம். செபங்களை ஏறெடுத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் இவை அனைத்திற்கும் முடிவு தருவீர் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். பதில் மொழி தாரும் இறைவா! ஆமென்.


இரவு செபம்

ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன். 

என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்; 

(திருப்பாடல்கள் 142:1 - 2)


  எங்கள் இன்னல்களை இல்லாமல் செய்பவரே! இந்த நாள் முழுவதும் நாங்கள் செய்த அனைத்து காரியங்களையும் உம் திருமுன் வைக்கிறோம். அவற்றுள் தீமையான காரியங்களை விலக்கி நன்மையான காரியங்களைச் செய்ய எங்களை வழிப்படுத்தும். இரக்கமுள்ள இயேசுவே! நாங்கள் உம்மைப் நோக்கி அபயக்குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறோம். எங்கள் மனக்குறைகளையும் இன்னல்களையும் உம்முன் வைத்துக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும்  முன்னதாய் எங்கள் தேவைகளை நீர் அறிந்தவராய் இருக்கிறீர். சீக்கிரமாய் இன்றைய சூழலில் எங்களின் தேவைகளை நீரே சந்தியும். இன்னல்களை, இடர்களை இல்லாமல் செய்யும். ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebookhttps://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...