Thursday, September 8, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - சனி



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

விடிவெள்ளி எழவே வானம் வெளுத்தது,
புலர்ந்தது புதிய நாளே,
கொடிய இருளுடன் இடர்கள் மறைந்தன,
கதிரவன் ஒளிக்கதிர் புகவே.

இரவினில் எழும்விண் மாய்கை மறைக,
குறைகுற்றம் உளமநின்(று) அகல்க,
இருளும் அருவருப் பான அனைத்தும்
இதயம் இருந்து ஒழிக.

இதனால் நாம்எதிர் பார்க்கும் அந்த
இறுதி நாள்வரும் போது
இந்நாள் நாம்புகழ் இசைப்பது போன்று
அந்நாள் மகிழ்வுடன் அமைக.

தந்தை இறைவன் தனிப்புகழ் பெறுக,
மைந்தனும் தூயஆவி யாரும்
சிந்தை கடந்த மூவொரு இறையாய்
எந்தக் காலமும் ஆள்க. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, நீர் என் அருகில் இருக்கிறீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.

திபா 119: 145-152

முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்;
உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.
என்னை மீட்டருளும்.
உம் ஒழுங்குமுறைகளை நான் கடைபிடிப்பேன்.

வைகறையில் நான் உம்மிடம் வந்து
உதவிக்காக மன்றாடுகின்றேன்.
உம் சொற்களில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.
உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக,
இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.

ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப
என் குரலைக் கேட்டருளும்;
உமது நீதித் தீர்ப்பிற்கேற்ப என்னுயிரைக் காத்தருளும்.
சதிசெய்து ஒடுக்குவோர் என்னனை நெருங்கி வருகின்றனர்;
உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.

ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்;
உம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.
எக்காலத்திற்குமாக அவற்றை நீர் ஏற்படுத்தினீர் என்று
நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று
முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நீர் என் அருகில் இருக்கிறீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.


மு. மொ. 2: ஆண்டவரே, உமது ஞானம் எனக்கு உதவி செய்யவும் என்னோடு உழைக்கவும் என்னுடன் இருக்கட்டும்.

ஆண்டவரே, எனக்கு ஞானத்தைத் தாரும்

சிறுபாடல்
சாஞா 9: 1-6, 9-11

நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. (லூக் 21:15)

மூதாதையரின் கடவுளே, இரக்கத்தின் ஆண்டவரே,
நீர் எல்லாவற்றையும் உமது சொல்லால் உண்டாக்கினீர்.
நீர் உண்டாக்கிய படைப்புகளின்மேல்
ஆட்சி செலுத்தவும்,
தூய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும்,
நேர்மையான உள்ளத்தோடு தீர்ப்பு வழங்கவும்,
உமது ஞானத்தால் மானிடரை உருவாக்கினீர்.
உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை
எனக்கு அருளும்;

உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளி விடாதீர்.
நான் உம் அடியான்; உம்முடைய அடியவளின் மகன்;
வலுவற்ற மனிதன்; குறுகிய வாழ்வினன்;
நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும் பற்றிச்
சிற்றறிவு படைத்தவன்.
மன்பதையில் ஒருவர் எத்துணை
நிறைவு உள்ளவராய் இருந்தாலும்,
உம்மிடமிருந்து வரும் ஞானம் அவருக்கு இல்லையேல்.
அவர் ஒன்றும் இல்லாதவராய்க் கருதப்படுவார்.

ஞானம் உம்மோடு இருக்கின்றது;
உம் செயல்களை அது அறியும்;
நீர் உலகத்தை உண்டாக்கியபோது அது உடனிருந்தது;
உம் பார்வைக்கு உகந்ததை அது அறியும்;
உம் கட்டளைகளின்படி முறையானது எது எனவும்
அதற்குத் தெரியும்.

உமது தூய விண்ணகத்தலிருந்து
அதை அனுப்பியருளும்;
உமது மாட்சிமிக்க அரியணயிலிருந்து
அதை வழங்கியருளும்.
அது என்னோடு இருந்து உழைக்கட்டும்.
அதனால் உமக்கு உகந்ததை நான் அறிந்துகொள்வேன்.
அது எல்லாவற்றையும் அறிந்து உய்த்துணரும்;
என் செயல்களில் விவேகத்துடன் என்னை வழி நடத்தும்;
தன் மாட்சியால் அது என்னைப் பாதுகாக்கும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உமது ஞானம் எனக்கு உதவி செய்யவும் என்னோடு உழைக்கவும் என்னுடன் இருக்கட்டும்.


மு. மொ. 3: ஆண்டவரின் உண்மைநெறி என்றென்றும் நிலைத்திருக்கும்.

இரக்கத்தின் இறைவனுக்குப் புகழ்

திபா 117

பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார்.’ (உரோ 15:8-9)

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும்!
ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப்
புகழுங்கள்!

ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும்
பேரன்பு உறுதியானது;
அவரது வாக்குறுதி என்றென்றும் நிலைத்துள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரின் உண்மைநெறி என்றென்றும் நிலைத்திருக்கும்.


அருள்வாக்கு

பிலி 2: 14-15

முணுமுணுக்காமலும் வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட சீரழிந்த தலைமுறையினரிடயே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, நீரே என் அடைக்கலம் என்று நான் உம்மை நோக்கிக் கதறினேன்.
எல்:ஆண்டவரே, நீரே என் அடைக்கலம் என்று நான் உம்மை நோக்கிக் கதறினேன்.
முதல்:வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு.
எல்:ஆண்டவரே, நீரே என் அடைக்கலம் என்று நான் உம்மை நோக்கிக் கதறினேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, நீரே என் அடைக்கலம் என்று நான் உம்மை நோக்கிக் கதறினேன்.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்போர்க்கு உமது ஒளியைக் காட்டியருளும்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்போர்க்கு உமது ஒளியைக் காட்டியருளும்.


மன்றாட்டுகள்

காலங்களுக்கெல்லாம் முன்பாகவே கடவுள் மரியாவைக் கிறிஸ்துவின் தாயாகத் தேர்ந்துகொண்டார். எனவே, அவர் விண்ணிலும் மண்ணிலுமுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் மேலானவர். அவரோடு சேர்ந்து நாம் அறிக்கையிட்டு மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரை எனது உள்ளம் போற்றி பெருமைப்படுத்துகின்றது.

தந்தையே, உம் மகன் இயேசு தம்முடைய அன்னையைத் திருச்சபைக்கு நம்பிக்கையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொடுத்திருக்கிறார் — நாங்கள் அந்த அன்னை செய்தது போன்று, உமது வார்த்தையை ஆழ்ந்த நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வோமாக.

மரியா உமது குரலுக்குச் செவிகொடுத்து, உமது வார்த்தையானவரை உலகத்திற்குக் கொண்டு வந்தார் — உமது அழைத்தலுக்குச் செவிகொடுத்து, நாங்களும் உம் மகனை மக்களிடம் கொண்டு செல்வோமாக.

திருச்சிலுவையின் அடியில் நின்ற மரியாவுக்கு வலிமையைக் கொடுத்து, இயேசுவின் உயிர்ப்பின்போது அவரை மகிழ்ச்சியால் நிரப்பினீர் — அவருடைய

பரிந்துரையால், எங்களுடைய துயரத்தைத் தணித்து நம்பிக்கையை உறுதிப்படுத்துவீராக.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவராகிய கடவுளே! நீரே எமது மீட்புக்குத் தொடக்கமும் ஊற்றுமாயிருக்கின்றீர்: எமது இவ்வுலக வாழ்வினால் உமது மாட்சியை வெளிப்படுத்தவும் விண்ணகத்தில் முடிவின்றி நாங்கள் உம்மைப் போற்றிப் புகழவும் செய்தருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, உமது ஊழியனின் கரத்தை உறுதிப்படுத்தும். உறுதுணையாயிரும்.

திபா 119: 121-128

நீதியும் நேர்மையும் ஆனவற்றையே நான் செய்துள்ளேன்.
ஒடுக்குவோர் கையில் நான் விழவிடாதேயும்.
உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்;
செருக்குற்றோர் என்னை ஒடுக்க விடாதேயும்.
நீர் தரும் விடுதலையையும் உமது நீதியான
வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து,
என் கண்கள் பூத்துப்போயின.

உம் பேரன்பிற்கேற்ப உம் ஊழியனுக்குச் செய்தருளும்;
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.
உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்;
அப்போது உம் ஒழுங்குமுறைகளை
நான் அறிந்து கொள்வேன்.

ஆண்டவரே! நீர் செயலாற்றும் நேரம் வந்துவிட்டது;
ஏனெனில் உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.
ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக
உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.

உம் நியமங்கள் அனைத்தையும் நீதி என
ஏற்றுக் கொண்டேன்;
பொய்யான வழி அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உமது ஊழியனின் கரத்தை உறுதிப்படுத்தும். உறுதுணையாயிரும்.


மு. மொ. 2: ஆண்டவரை நோக்குங்கள்: மகிழ்ச்சியால் மிளிர்வீர்கள்.

நீதிமானுக்கு ஆண்டவரே மீட்பு

திபா 34: 1-10

‘ஆண்டவர் எத்தனை இனியவர்என்றுசுவைத்தீர்கள் அன்றோ’ (1பேதுரு 2:1).

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
ஆண்டவரைப் பற்றி நான் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக்கேட்டு அக்களிப்பர்.

என்னுடன் இணைந்து ஆண்டவரைப்
பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க நாம் மேன்மைப்படுத்துவோம்.
ஆண்டவரிடம் நான் வேண்டினேன்
அவர் எனக்குச் செவிசாய்த்தார்;

அனைத்துவகை அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்.

அவரை நோக்கிப் பார்த்தோர்
மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
எல்லா நெருக்கடியினின்றும்
அவனை விடுவித்துக் காத்தார்.

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை
அவர் தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று
சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்;
அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி கிடப்பினும்,
ஆண்டவரை நாடுவோர்க்கு
நன்மை ஏதும் குறைவுபடாது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரை நோக்குங்கள்: மகிழ்ச்சியால் மிளிர்வீர்கள்.


மு. மொ. 3: உடைந்த உள்ளத்தவர்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

திபா 34: 11-22

பிள்ளைகளே வாரீர்!
நான் சொல்வதைக் கேளீர்!
ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி
நான் உங்களுக்குக் கற்பிப்பேன்.

வாழ்வில் இன்பம் காண உனக்கு விருப்பமா?
வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு
நெடுநாள் வாழ நாட்டமா?

தீமையினின்று உன் நாவைக் காத்திடு
அஞ்சக மொழியை உன் வாயினின்று விலக்கிடு!
தீமையைவிட்டு விலகு, நன்மையே செய்திடு;
அமைதியை நாடிடு, அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

ஆண்டவருடைய கண்கள்
நீதிமான்களை நோக்குகின்றன;
அவர் தம் செவிகள்
அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
தீமைசெய்வோர்க்கு எதிராய்
ஆண்டவரின் முகம் இருக்கிறது;
அவர்களின் நினைவு உலகிலிருந்து
அவர் அற்றுப்போகச் செய்வார்.

நீதிமான்கள் மன்றாடும்போது,
ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அனைத்து இடுக்கண்களினின்றும்
அவர்களை விடுவிக்கின்றார்.
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்
ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பலவாகும்;
அவை அனைத்தினின்றும்
ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
அவர்களின் எலும்புகளை எல்லாம்
அவர் பாதுகாக்கின்றார்;
அவற்றுள் ஒன்றும் முறிவுபடாது.

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;
நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

தம் ஊழியரின் உயிரை ஆண்டவர் மீட்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகும் எவரும்
தண்டனை அடையார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : உடைந்த உள்ளத்தவர்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.


அருள்வாக்கு

கலா 5: 26; 6: 2

கலா 5:26; 6:2

வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப் படாமலும் இருப்போமாக! ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.


முதல்:சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று. எத்துணை இனியது.
எல்:ஆண்டவர் அங்கிருந்தே ஆசிதனைப் பொழிந்தருள்வார்.

இறுதி மன்றாட்டு

ஆண்டவராகிய கடவுளே, நிலையன்பின் உயிருள்ள ஒளியே, நாங்கள் அன்பின் ஆர்வத்தால் தூண்டப்பட்டு எப்பொழுதும் அனைத்திற்கு மேலாக உம்மையும் உம் பொருட்டு எம் சகோதரர் சகோதரிகளையும் அன்பு செய்ய வரமருள்வீராக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

உலகப் பொருள்களின் ஊற்றாம் இறைவா,
ஒருமுனை முதல்மறு முனைவரை உள்ளவற்றை
நினைத்துச் செய்தஉம் ஆற்றல் விளங்க
புனிதக் கொடையால் நீர் நிரப்புகிறீர்.

இத்துணை மாபெரும் படைப்புச் செயலை
இத்தினம் முடித்து ஓய்வெ டுத்தீர்;
நித்தமும் முறையாய்ப் படைத்தபின் முடிவில்
அத்தனை எல்லாம் நலம் என்றீர்.

வலுக்குறை வுள்ள மாந்தரும் இன்று
நெறிதவறிய வழியை விட்ட கன்று
நலமிகு நெறியில் நல்லவராய் நடந்து
உரியப் பரிசைப் பெறஅ ருள்வீர்.

நீதி வழங்கிட நீர்வரும் நாளில்உம்
தண்ணொளியைக் கண்டு ஒடுங்காமல்
தீதிலா அமைதியை அடைந்தோம் என்று
முழங்கிடு வோம்மிகு மகிழ்வோடு.

நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர்நிலை வீற்றிருக்கும் உம்மைகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்


திருப்பாடல்கள்

மு. மொ. 1: எருசலேமில் அமைதி நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

திருநகராகிய எருசலேம்

திபா 122

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர் விண்ணக எருசலேம் (எபி 12:22).

“ஆண்டவரது இல்லத்திற்குச் செல்வோம்", என்ற
அழைப்பைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன். எருசலேமே!
எங்கள் கால்கள்
உன் வாயில்களில் நிற்கின்றன.
எருசலேம் செம்மையாக
ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும்.
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;

இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள்
நன்றி செலுத்தச் செல்வார்கள்.
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள் ஆகும்.

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி
வேண்டிக்கொள்ளுங்கள்.
“உன்னிடம் அன்பு கூர்பவர்கள்
வளமுடன் வாழ்வார்களாக!
உன் கோட்டைக்குள் அமைதி நிலவுவதாக!
உன் மாளிகைகளில் நல்வாழ்வு நிலைப்பதாக!
உன்னுள் சமாதானம் நிலவுவதாக!”

என என் சகோதரர் சார்பிலும்
என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்
இங்கே இருப்பதால் உன்னில் நலம் பெருகும்படி
நான் மன்றாடுவேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : எருசலேமில் அமைதி நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.


மு. மொ. 2: விடியலிலிருந்து இரவுவரை என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.

பாதாளத்திலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுகிறேன்

திபா 130

“அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத் 4:21).

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான்
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள்
கவனத்துடன் கேட்கட்டும்.

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை
மனத்தில் கொண்டிருந்தால், யார்தாம் நிலைத்து
நிற்கமுடியும்?
நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

ஆண்டவருக்காக நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
என் நெஞ்சம் காத்திருக்கின்றது.
அவருடைய சொற்களுக்காக
நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்,
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய்
ஆவலுடன் காத்திருக்கின்றது.

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு அவரிடமே உள்ளது;
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
எல்லாத் தீவினைகளினின்றும்
இஸ்ரயேலை மீட்பவர் அவரே!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : விடியலிலிருந்து இரவுவரை என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.


மு. மொ. 3: இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர், அல்லேலூயா.

கிறிஸ்து இறை ஊழியன்

சிறுபாடல்
பிலி 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை
வலிந்து பற்றிக்கொண்டிருக்க
வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.

மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்,
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என
எல்லா நாவுமே அறிக்கையிடும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர், அல்லேலூயா.


அருள்வாக்கு

2 பேது 1: 19-21

இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற்கொள்வது நல்லது; ஏனெனில், பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது. ஆனால் மறைநூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறிய வேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல.


சிறு மறுமொழி

முதல்:கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.
எல்:கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.
முதல்:வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.
எல்:கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : இயேசு பேதுருவிடம், "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என, நான் உனக்குச் சொல்கிறேன்" என்றார்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இயேசு பேதுருவிடம், "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என, நான் உனக்குச் சொல்கிறேன்" என்றார்.


மன்றாட்டுகள்

தன்னுடைய நிறைவில் தன் சகோதரர் சகோதரிகளுக்கு அன்புக்குப் பதிலன்பு காட்டும் கிறிஸ்துவிடம் உருக்கமாக வேண்டுவோம்.

எல்: ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

இறந்து உயிர்த்தெழுவோருள் தலைப்பேறானவரே நீர் உமது திரு இரத்தத்தால் எங்கள் பாவங்களைக் கழுவி எங்களைத் தூய்மைப்படுத்தினீர் – நீர் எமக்குச் செய்தவற்றை நாங்கள் உய்த்துணரும் பொருட்டு எங்களை வழிநடத்தியருளும்.

நீர் எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக இருக்க அழைத்தீர் — நற்செய்தியை நாங்கள் ஆழ்ந்து அறியவும்

அதை எங்களுக்கே உரியதாக்கவும் அருள்புரியும். அமைதியின் அரசரே, ஆள்வோரின் செயல்களை நெறிப்படுத்தும் — சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அதிக அக்கறை காட்ட உமது ஆவியானவர் அவர்களைத் தூண்டுவாராக.

சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோரையும், சமயம், குலம் நிறம் இவற்றிற்காகத் துன்புறுத்தப்படுவோரையும் உமது ஆற்றலால் வழிநடத்தும் — அவர்களுடைய மனித மாண்பு மதிக்கப்படவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும் செய்வீராக.

உமது அமைதியில் இறந்தோர் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் — அன்னை மரியாவோடும் அனைத்துப் புனிதர்களோடும் அவர்களை நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்லும்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

அனைத்தையும் படைத்து ஆண்டு வரும் கடவுளே! எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் முழு உள்ளத்துடன் உமக்கு பணி செய்யவும் உம்முடைய மன்னிப்பு, அன்பு இவற்றின் வல்லமையை உய்த்துணரவும் எங்களுக்கு அருள் தாரும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, எனக்கு இரங்கி என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.

நன்றிப் பாடல்

திபா 4

ஆண்டவர் அவரைச் சாவினின்று உயிர்ப்பித்து எல்லாப்புகழ்ச்சிக்கும் தகுதியுடையவராக்கினார்’ (புனித அகுஸ்தினார்).

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;

மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டுவருவீர்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை
நாடிச் செல்வீர்?
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாய்த்
தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிந்து கொள்வீர்!
நான் மன்றாடும்போது அவர் எனக்குச்
செவிசாய்க்கின்றார்;

சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருப்பீர்.
முறையான பலிகளைச் செலுத்துவீர்;
ஆண்டவரை நம்புவீர்.
’நலமானதை எங்களுக்கு அருளை யார் உளர்?’
எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உம் திருமுக ஒளி வீசச் செய்யும்.

தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில்
மக்கள் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை
நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்;
ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நிரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, எனக்கு இரங்கி என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.


மு. மொ. 2: இரவு நேரங்களில் ஆண்டவரைப் போற்றுங்கள்.

கோவிலில் இரவு இறைவேண்டல்

திபா 134

”கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே. பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” (திவெ. 19:5)

இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில்
பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே!
நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி
ஆண்டவரைப் போற்றுங்கள்.

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர்
சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இரவு நேரங்களில் ஆண்டவரைப் போற்றுங்கள்.


அருள்வாக்கு

இச 6: 4-7

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப் பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, இவ்விரவில் எங்களைச் சந்திக்க வாரும்; இதனால் உம் மகனாம் கிறிஸ்துவின் உயிர்ப்பில் அக்களித்து உமது ஆற்றலால் வைகறையில் நாங்கள் துயிலெழுவோமாக. உம்மோடு என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...